Posts

Showing posts from June, 2022
Image
  திண்ணை இணைய இதழில் வெளியான கதை நஞ்சு எஸ்.சங்கரநாராயணன்   ‘அ வர்’ வேண்டாம். ‘அவன்’தான். வயசு முப்பது தாண்டியானாலும் இன்னும் கல்யாணம் ஆகவில்லை. தொழில் சொன்னால் டாக்டர். ஆனால் அவன் இடத்தில் அவன் ஒற்றை ஆசாமி. தானே போய் ஸ்டவ் பற்ற வைத்து சிரிஞ்சுக்கு வெந்நீர் சூடு பண்ணி, நோயாளியை சோதித்துப் பார்த்துவிட்டு, மருந்துகள் எழுதி, (லெட்டர் பேட் இல்லை. ரப்பர் ஸ்டாம்புதான்.)   தானே போய் எடுத்துவந்து தருவான். மருந்துக்கும் சேர்த்து பணம் பெற்றுக் கொள்வான். உங்களுக்கு மருந்தகம் வரை போற வேலை மிச்சம்தானே? பல்துறை வித்தகனாக அவன் இருந்தாலும் முதல் பார்வைக்கு அவனை “கம்பவுண்டரா?” என்று கேட்டார்கள் வந்தவர்கள். அத்தனைக்கு மோசமில்லை என நினைத்தவர்கள் கூட அவனிடமே “டாக்டர் இல்லையா?” என்று கேட்டார்கள். பஞ்சாட்சரம் சுருங்கி பஞ்சு என ஆனால், அவன் பெயர் நஞ்சுண்டேஸ்வரன், அது சுருங்கி நஞ்சு என ஆகிவிட்டது. அவங்க வீட்டிலேயே அவன் நஞ்சுதான். ஜாதகத்தில் விபரீத ராஜயோகம் போல விபரீத ராஜமோசமாகிப் போயிற்று. நஞ்சு, மருந்து இரண்டுக்குமே கேது ஆதிபத்தியம். அவன் உத்தியோகத்துக்கு ஒத்துப் போனது. நம்மாட்கள் சங்கட ஹர சதுர்த்தியையே
Image
நிசப்த ரீங்காரம் / சிந்தனைத் தொடர் பகுதி 8 நன்றி – பேசும் புதிய சக்தி மாத இதழ் • வேப்ப மரத்தில் தேன்கூடு ஞானவள்ளல் ஒ ரு சிந்தனை மொழி வழியாக வெளிப்படும் போது அதன் அழகு தன்னைப்போல கட்டமைக்கப் படுகிறது. சிந்திக்கிறவனின் ஈடுபாடு, கவனம் சார்ந்து அதன் வீச்சின் வெளிப்பாட்டின் ஆழமும் சேரும் எனலாம். தன்னை முற்றிலும் அந்த சிந்தனையில் அமிழ்த்திக் கொள்கையில் அதை ரசித்து அந்தப் படைப்பாளன் அதை வெளிப்படுத்த, வழக்கம் இல்லாத புதிய பாதைகளையும் சேர்த்தே வடிவமைத்துக் கொள்ளப் பிரியப் படுகிறான். அதனால்தான் காவியங்களிலும், கவிதைகளிலும் புதிய புதிய வகைமைகள் அமைய முடிகிறது. ராமனின் பெரும் காவியம் எழுத முனைகிறான் கம்பன். அந்தக் காவியத்தில் எத்தனை விதமான பாடல்கள். அனுமனைப் பற்றிய துதிப்பாடல் ஒன்று. அஞ்சிலே ஒன்று பெற்றான், அஞ்சிலே ஒன்றைத் தாவி, அஞ்சிலே ஒன்று ஆறு ஆக, அஞ்சிலே ஒன்று பெற்ற அணங்கைக் கண்டு, அஞ்சிலே ஒன்றை வைத்தான்… என சொல் விளையாட்டு. சான்றோர் கவியெனக் கிடந்த கோதாவிரியினை வீரர் கண்டார், என இடையே ஒரு கவிதையில் இரட்டுற மொழிதல், என அங்கங்கே ஞானத்தில் பொங்குகிறான். ஓசைநயம் மிக்க பாடல்கள் அவ்வப்ப
Image
  ஆவநாழி 12 – ஜுன் ஜுலை 2022 இதழில் வெளியான கதை art / roy kandhali இரண்டு பெண்கள் எஸ்.சங்கரநாராயணன்   ந ந்தினி இப்போது வேலைக்குப் போகிறாள். அலுவலகம் போய்வர அவளிடம் இரு சக்கர வாகனம் இருக்கிறது. அவள் கல்லூரியில் முதுநிலை படிக்கும்போதே அப்பா வாங்கித் தந்திருந்தார். பெண்ணின் தேவை எது என பார்த்துப் பார்த்து செய்துகொடுத்த அப்பா. கணவனைப் பற்றி லலிதாவுக்குப் பெருமிதம் உண்டு. நந்தினி வயிற்றில் இருக்கும்போதே அவன், மகேஸ்வரன் பெண் குழந்தையாப் பெத்துக் குடுடி, என்றான். “உன்னைப்போல ஒரு பெண்…” என்று சிரிக்கிறான். பிறகு சொன்னான். “ஓர் ஆணின் பெண் அடையாளம்… என்பது ஆச்சர்யமானது அல்லவா?” “ஏய், அதேபோல நீ… ஆண் குழந்தையை எதிர்பார்க்கிறியா?” என்று அவளைச் சீண்டினான் அவன். அவள் பதில் சொல்லவில்லை. ஆண்கள் எப்படியெல்லாம் சிந்திக்கிறார்கள்! பெண் நந்தினி ஒருநாள் அலுவலகம் விட்டு வர தாமதம் ஆகி விட்டது. அன்றைக்குக் காலையிலேயே அவள் வண்டி எடுத்துப் போகவில்லை. லேசாய் மழை தூறிக் கொண்டிருந்தது. மணி ஏழாகி விட்டது. இன்னும் நந்தினி வீடு திரும்பவில்லை. லலிதா அலுவலகம் முடிந்து வந்திருந்தாள். நந்தினி இன்னும் வரவில்லை.