Posts

Showing posts from March, 2015

short story - japan

Image
வங்க வேங்கையின்  கடைசி கணங்கள் யோகோ ஒகாவா (ஜப்பான்) * * * தமிழில் எஸ். சங்கரநாராயணன் பு றவழிச் சாலையை விட்டு நதியோரமாய் தெற்காக... பாலத்தைத் தாண்டுகையில் சின்னதாய்த் தயக்கம். திரும்பி... ஊருக்குள்ளே நுழைந்திருந்தேனானால்... ஒரு சில நிமிடங்களில்... 'அவளது' அடுக்ககத்தில் இருந்திருக்கலாம்.      மகா புழுக்கமான மதியம். காற்றே இல்லை. சாலையோர மரங்களெல்லாம் விதிர்விதிர்த்து நின்றன. கொதிக்கும் கல்த்தரையின் அனல் கானல். எதிர்ப்பக்கமிருந்து வரும் கார்களின் மீது பட்டுத் தெறித்து வரும் சூரியன் கண்ணைக் குருடாக்கியது. காரின் குளிர்சாதனத்தை முழுசாய் முடுக்கியும் ஜன்னல்வழியே பீரிட்டுப் பாயும் சூட்டை வேட்டை ஆட இயலவில்லை. கார் ஸ்டீயரிங்கே கொதித்தது. கைகள் கொதித்தன.      வீட்டில் இருந்து கிளம்பியதிலிருந்தே எனக்குள் பைத்தாரக் கணக்குகள். அடுத்த நிறுத்தத்தில் சிவப்பு கிடைத்தால் யூ டேர்ன் அடி. வீடு திரும்பு. எதிரே வெள்ளி வண்ணத்தில் பந்தயக் கார் வருகிறதா, பயணத்தைத் தொடர். வளர்ப்புப் பிராணிகள் கடையில் நேற்று பார்த்தேனே, டெரியர் நாய்க்குட்டி, போகையில் அது விற்கப்பட்டிருந்தால் வந்த வ
Image
சைலபதியின் புதினம் - தேவன் மனிதன் லூசிஃபர் * மனிதத்தைத் தேடிப் புறப்பட்டவனின் கதை: * முனைவர் கு. ஞானகுரு துணைப்பேராசிரியர் தமிழ்த்துறை,  தாகூர் கலைக்கல்லூரி, புதுச்சேரி-8.  * * காலத்தின் அவசர கதிக்குள் அறங்கள் முகமிழந்துவிட்டன. சக மனிதர்கள், அவர்களின் உணர்வுகள், அவர்களுடனான உறவுக் கலப்புகள் இவை எல்லாவற்றிலிருந்தும் ஏதோ ஒரு காரணத்தைக் கண்டறிந்து விலகிவிடத் துடிக்கிறது மனித மனம். தனக்குள் தன்னைக் குறுக்கி தனக்கான உண்மைகளை நியாயப் படுத்தியபடி முன் நகர்கிறான் அவன். ஏற்கனவே சொல்லப்பட்ட பேருண்மைகளைக் கடந்து, தனக்கான வழிகளை உருவாக்கிக் கொள்கிறான் அவன். சமூகம் சிறக்க அவனிடம் எந்தத் திட்டமோ, அவாவோ, முயற்சியோ இல்லை. அவன் அதை விரும்பவும் இல்லை. நிறைவின்மையின் விளிம்பில்தான் எப்போதும் அவனின் நிற்றல் தொடர்கிறது. எல்லாத் தருணங்களிலும், எல்லாவற்றையும் விமர்சிப்பதனூடாக தேவனாகிவிட முடியும் என்கிற நம்பிக்கையில் திளைக்கிறான் அவன். ஆனால், அது எப்போதும் சாத்தியமாகாது. காலம் அவனுக்குப் பொறுப்பை உணர்த்தும் என விடை பகர்கிறார் சைலபதி. * * முன்னுரை: இப்பெருவெளிப் பரப்பை நிர