Posts

Showing posts from April, 2016
Image
தீ யி னா ற்   சுட்ட  மண் எஸ். சங்கரநாராயணன் உலகநாதன் ரொம்ப நிதானமான மனுசன். ஊர் எல்லையில் இன்றைக்கும் அவர் வடித்த பொம்மை, ஐயனார் உருவச்சிலை இருக்கிறது. அடேடே அந்தக் கண்களின் உக்கிரம், கையில் வீச்சரிவாள், ஒரே வீசு. எதிராளி தலை துண்டாத் தெறிச்சி விழும்… என்று பயமுறுத்துகிற அளவில் இருக்கும். இத்தனை நிதானமான மனுசன் வாலிபப் பிராயத்தில் வேகமும் பரபரப்புமாய் வளைய வந்திருப்பார் என்று தோன்றியது. எல்லாம் அலையடங்கி இப்போது நிதானப் பட்டிருந்தது. அவர் ஞாபகமாய் இன்னும் ஊரில் எத்தனையோ சுடுமண் சிற்பங்கள். குதிரைகள். மான்கள். ஆடுகள். மாடுகள்… அவற்றின் வண்ணக் குழைவுகளே ஆச்சர்யப் படுத்தும். மேல்சட்டை போடாமல் ஆனால் முண்டாசு கட்டாமல் பார்க்க முடியாத கிராமத்து மனுசனுக்குள் ஒரு கலைஞன் இருந்து அவரை உசுப்பி ஆட்டுவித்துக் கொண்டிருந்தான் போலும். சிறு போகம் விளைய சாப்பாட்டுக் கவலை எதுவுங் கிடையாது. கோடையோவெனில் வாசல் வேப்ப மரத்தடிக் காற்றில் படுத்துக் கொண்டபடியே என்னமாச்சும் பாட்டு எடுப்பார். அந்தக் கால பாகவதர் பாட்டு. வெறும் கேள்வி ஞானம்தான். சுருளி எப்பவாவது வந்தால் மரக்காலைத் தட்ட தாளமும் சேர்ந்த
Image
வண்ணச்சீரடி எஸ். சங்கரநாராயணன்   ஆ னந்தி இப்போது நடக்க ஆரம்பித்திருந்தது. வீட்டு வராந்தாவில் நடைவண்டி வைத்து அதை நடத்தினால் என்ன வேகம். வேகம் அதிகரிக்க அதிகரிக்க நடை தறிகெட்டு ஒரு ஓட்டம். ‘பாத்து. மெதுவா மெதுவா’ என்று பிடிக்க வந்தால் கையைத் தட்டிவிட்டு விடுகிறது. அந்த விளையாட்டுக்கு அம்மா ஐஸ்வண்டி என்று பேர் சொல்லிக் கொடுத்திருந்தாள். ‘ஸ்’ என்று உயரத்தில் வைத்திருக்கும் நடைவண்டியைக் காட்டும் அது. தடதடவென்று தொடையெல்லாம் அதிர ஒரு நடை, நடையோட்டமாகி, நேரேபோய் சுவரில் டமாரென்று முட்டி, வண்டியைத் திரும்ப இழுக்கத் தெரியாமல் நிற்கும். வண்டியைத் திரும்ப இழுத்தால் டப்பென்று தரையில் உட்காரும். தானே எழுந்துகொள்வதாக வண்டியைப் பிடிக்க, வண்டி அதன்மேல் கவிழும். அவள் குழந்டிதயைப் பார்த்துச் சிரிக்க வேண்டும். எல்லாவற்றுக்கும் அவளிடம் பாராட்டை எதிர்பார்த்தது அது.  தவறி விழுந்தால் கூட சிரிக்க வேண்டும் என்றால் எப்படி? என்ன ஒரு அராஜக ராஜாங்கம் நடத்துகிறது, என்று ஆச்சர்யமாய் இருக்கும் அவளுக்கு. நன்றாக ஓடிச்சாடும் வயது. இந்நேரம் சாப்பாடு விஷயத்தில் நாம் சரியாக ஈடு கொடுக்க வேண்டாமா?... என்று