Posts

Showing posts from February, 2019
Image
உவகச் சிறுகதை / ஜப்பான் நன்றி - மகாகாவி ஜனவரி 2019 இதழ் ஜே யாசுனாரி கவாபாட்டா தமிழில் எஸ். சங்கரநாராயணன் வை கறைப் பொழுதில் இருந்தே ஜே உரக்கப் பாட ஆரம்பித்திருந்தது. மழைத் தடுப்பான கதவுகளை அவர்கள் ஒதுக்கித் திறந்தார்கள். பைன் மரத்தின் கீழ்க் கிளையில் இருந்து மேலெழுந்து அது பறந்ததை எல்லாரும் பார்த்தார்கள். ஆக அது திரும்பி வந்திருந்த மாதிரிதான் பட்டது. காலை உணவுவேளையின் போது அதன் சிறகடிப்பு கேட்டது. “ஐய அந்தப் பறவை ஒரு இம்சை.” தம்பி எழுந்துகொண்டபடியே சொன்னான். “சரிடா சரிடா” என அப்பத்தா அவனை அடக்கினாள். “அது தன் குஞ்சைத் தேடுதுடா. நேத்து அதன் குஞ்சு கூட்டில் இருந்து கீழ விழுந்திட்டது போல. நேத்தி அந்தி சாயறவரை அது இங்கிட்டும் அங்கிட்டுமா பறந்துக்கிட்டே யிருந்தது. குஞ்சு எங்கன்னு அது இன்னும் கண்டுபிடிக்கலையோ என்னவோ? ச். என்ன நல்ல அம்மா அது, இல்லே? காலை வெளிச்சம் வந்த ஜோரில் திரும்ப என்ன ஏதுன்னு பாக்க வந்திருக்கு.” “அப்பத்தா அழகா எல்லாம் புரிஞ்சிக்கறா” என்றாள் யோஷிகோ. அப்பத்தாவின் கண்கள் ஒண்ணும் தரமில்லை. ஒரு பத்து வருசம் முன்னாடி அவள் ‘நெஃப்ரைட்டிஸ் ஒன்’ வந்து சிரமப்
Image
உலகச் சிறுகதை நடக்க முடியாத நிஜம் சார்லஸ் மெய்கிவி (ஆஸ்திரேலியா) தமிழில் - எஸ். சங்கரநாராயணன் பு தன்கிழமை ராத்திரி பத்துமணிக்கு நான் ரே பானைப் பட்டணத்துக்கு என் எஃப்-250 வண்டியில் கூட்டிப்போனேன். அவனது விநோத அனுபவத்தை அதற்குமுன்னமே அங்கே சிலர் கேள்விப்பட்டிருந்தார்கள். நாங்கள் ஊர்ப்போய்ச் சேருமுன்னிருந்தே அவர்கள் அதைப்பற்றி வார்த்தையாடிக் கொண்டிருந்தாலும், நடந்தது அவர்களுக்குப் புரிந்திருக்கவில்லை. எனக்கே கதையில் பாதிதான் தெரியும். அவனைக் கண்டுபிடித்தது நான்தான்.       இப்ப மட்டுமல்ல எப்பவுமே அவன் நல்ல நண்பனாக யாருக்குமே அமைந்ததில்லை. நிதானமா இருந்தான்னா எரிச்சலூட்டுவான். குடிபோதையிலோ எதுக்கும் லாயக்கில்லாதவனாய் ஆகிப் போனான். சிரமதசையில்தான் வாழ்ந்தான் என்று தோணுகிறது. ஆனால் கஷ்டம் யாருக்குத்தான் இல்லை...       புதன்கிழமை காலை, பதினேழாம் எண் காற்றாலைவரை நான் வாகனமெடுத்துப் போனேன். எங்கள் குடோனுக்குத் தேவையான தண்ணீர் சரியாக வந்து கொண்டிருக்கிறதா என்று பார்க்க வேண்டியிருந்தது. காற்றாலை அருகில் ஒரு இருநூறு மீட்டர் கிட்டத்தில் போயிருப்பேன். அதோ கார் ரேடியேட்டரின் குழாய
Image
சிறுகதை நீரால் அமையும் எஸ். சங்கரநாராயணன் * அ ம்மன்கோவிலில் அருகே, யானையாய்க் கட்டிக் கிடந்தது தேர். நல்லா நாலாள் உயரத்துத் தேர். வருடம் ஒருமுறை அதை சுத்தம் செய்து, மராமத்து பார்த்து, தேர் இழுப்பார்கள். தைப்பூச திருவிழாக் காலங்கள் உற்சாகமானவை. ராஜேஸ்வரி திருவிழா பார்க்க வீட்டோடு வந்திருக்கிறாள். கோவிலடியும், அந்தத் தேர் வளாகமும், திடலும் எல்லாமே திருவிழாச் சமயங்களில் எப்படி ஜோராய்க் கனவுச்சாயல் கொண்டு விடுகின்றன. திடல் பரபரத்து விடுகிறது. பொறிகடலை, ஷர்பத் கடைகள். மனுசத் தலையும் பாம்புஉடலுமான நாககன்னிகை. அதைப் பார்க்க அழைக்கிற வித்தியாசமான 'ர்ரூம்' அதிர்வு ஒலி. ஊரில் பத்துக்கு ஆறுபேர் மொட்டையடித்து, தலையில் சந்தனம் பூசித் திரிகிறார்கள்... காலத்தை அனுசரித்து, இப்போது திடீர் புகைப்படக் கடைகள். கொடக், என்ன பேர் இது? படம் எடுக்கிற சத்தமா! - அதில் விஜய், விக்ரம், சூர்யா பிளைவுட்-உருவங்கள். கூடநின்று படம் எடுத்துக் கொள்ளலாம். கம்பியூட்டரில் ராசி பலன். என்றாலும் ஒருபக்கம், லேகிய விற்பனை. பீமபுஷ்டி அல்வா. ஜோதிகா வளையல். கையில் வாச் கட்டினாப்போல ஜவ்வு மிட்டாய். ட்ர்ரிங் என
Image
ஜெயந்தி சங்கர் சிறுகதைகள் முழுத்தொகுப்பு எஸ். ச ங்கரநாராயணன் அ றிவிற் சிறந்த இந்த அவையை ,   இந்த அருமையான மாலை நேரத்தில் வணங்கி மகிழ்கிறேன். தோழி ஜெயந்தி சங்கரின் இதுவரை வெளியான மொத்தக் கதைகளையுமாகத் தொகுத்த நூல் வெளியீட்டு விழா இது. ஒரு எழுத்தாளனின் அல்லது எழுத்தாளினியின் வெற்றியின் முதல் படிக்கட்டு அல்ல ,   இரண்டாவது படிக்கட்டாகவே இதை நான் பார்க்கிறேன். மூன்றாவது மைல்கல் என்றுகூட இதைச் சுட்டலாம். காரணம் ஜெயந்தி சங்கரின் பெரும்பாலான கதைகள் பரவலாய்ப் பல்வேறு சஞ்சிகைகளிலும் ,   இணையதள இதழ்களிலும் முதல் பிரசுரம் கண்டவை. பின் அவை நூல்களாக ஒருங்கமைவு கண்டன. இப்போது அவற்றின் மகா மாலை உருவாக்கப்பட்டுள்ளது. அறுபதடி ஆஞ்சனேயருக்கு வடைமாலை சாத்துகிறாப் போல ஒரு பிரம்மாண்டம் இதில் நமக்குக் கிடைக்கிறது. அவருக்கும் ஹா ,   என்கிற ஒரு திகட்டலும் ,   சிறு புன்னகையும்   சிறு கர்வமும் கூட இதில் கிடைத்திருக்க வேண்டும். எனது இரு பெருங்கதைக் கொத்துகள் இப்படி கலைஞன் பதிப்பகம் தயவில் வெளியானபோது எனக்கும் இப்படி ஒரு நெஞ்சுவிரித்த சுவாசம் வந்தது. அப்படியொன்றும் நமது வாழ்க்கை ,   அதுசார்ந்த கணக்