Posts

Showing posts from November, 2017
Image
'விறகு' – வெட்டி   அன்டன் செகாவ் தமிழில் எஸ். சங்கரநாராயணன் ''த ர்மப்பிரபு, உங்கள் பரிவுப் பார்வையை என்மீது செலுத்துங்கள். நான் மூணு நாளா எதுவுமே சாப்பிடவில்லை. கடவுளாணை. குளிருக்கு ஒதுங்க விடுதிச் செலவுக்கான அஞ்சு கோபெக், அதுவே என்னிடம் கிடையாது. ஒரு கிராமத்தில் அஞ்சு வருஷம் நான் பள்ளிக்கூட வாத்தியாரா வேலை பார்த்தவன். ழெம்ஸ்ட்வோ விவகாரத்தில், அதில் சம்பந்தப்படவே இல்லாத போது,  எவனோ என்னையும் மாட்டிவிட்டுட்டான். இப்ப வேலை யிழந்து நிற்கிறேன். ஒரு வருஷமாய் இப்படி போக்கத்துப் போயி அல்லாடித் தவிக்கிறேன்...''       இவர் ஸ்கோர்த்சவ். பீட்டர்ஸ்பர்க் நகரத்தின் வழக்கறிஞர் அவனைப் பார்த்தார். கந்தையான அவனது கருநீல மேல்கோட்டு. இரத்த சோகையான குடிபோதைக் கண்கள். செம்மைப்பட்ட கன்னங்கள்... அவனை எங்கேயோ பார்த்தாப் போல் இருந்தது.        ''... இப்ப எனக்கு காலுகா மாநிலத்தில் ஒரு வேலை கிடைச்சிருக்கு...'' அவன் தொடர்ந்தான். ''என்கிட்ட தம்பிடி கிடையாது. எப்படி அங்க நான் போக முடியும்? கருணை காட்டுங்க புண்ணியவான். கேட்க அவமானமாகத்தான் இருக்கிறது. ஆனா
Image
ஒரு லட்சம் புத்தகங்கள்   சுஜாதா   சிங்களத் தீவினுக்கோர் பாலம் அமைப்போம் -மகாகவி Welcome to delegates of Bharathi International நீல வண்ணத்தில் எழுத்துக்கள் வெள்ளைத் துணியில் ஐந்து நட்சத்திர ஓட்டலின் வாயிலில் ஆடின. தலைப்பாகைக்காரரின் படம் கீழே துடித்துக் கொண்டிருந்தது. அருகே பல வர்ணக் கொடிகள் சஞ்சலித்துக் கொண்டிருந்தன. டாக்டர் நல்லுசாமி கண்ணாடிக் கதவைத் திறப்பதற்கு முன் சேவகன் திறந்து புன்னகைத்தான். உள்ளே குளிர்பதனம் செய்யப்பட்ட அரங்கில் கம்பளத்தில் தமிழறிஞர்கள் நிறைந்திருந்தார்கள். புதுக்கவிஞர் கேக் கடித்துக்கொண்டிருந்தார். சாகித்திய அகாதமி சிகரெட் பற்றவைத்துக் கொண்டிருந்தார். பரிபாடல் சோபாவில் உட்கார்ந்து கொண்டு தொடை மேல் காகிதம் வைத்துக் கடிதம் எழுதிக் கொண்டிருந்தார். உரையாடலில் தமிழ் உலவியது. "தமிழ்நாட்டிலே சாஸ்த்ரங்களில்லை. உண்மையான சாஸ்த்ரங்களை வளர்க்காமல், இருப்பனவற்றையும் மறந்து விட்டு, தமிழ்நாட்டுப் பார்ப்பார் பொய்க் கதைகளை மூடரிடம் காட்டி வயிறு பிழைத்து வருகிறார்கள்..." "இதைச் சொன்னது யாரு, சொல்லுங்க பார்க்கலாம்?" "பேரறிஞர் அ
Image
நன்றி நவம்பர் இதழ் கவிதை உறவு யானைக் கூண்டு எஸ். சங்கரநாராயணன் இ ரண்டு ஊர்களுக்கு இடையே ஒரு காலத்தில் வனாந்திரமாய் இருந்திருக்கலாம் அந்த இடம், இப்போது ஆள் அரவமற்று. அமைதி அங்கே ஒரு நீர்க்குட்டை போலத் தேங்கிக் கிடந்தது. பெரும்பாலும் தரைப் பொட்டல். திடல் போல பூமி வெள்ளரியாய் வெடித்துப் பிளந்து கிடந்தது. நடுவே பாழடைந்த கோவில் ஒன்று. அதைப் பார்க்க வருவாரும் இல்லை. பராமரிப்பாரும் இல்லை. பூமியில் விலக்கி வைக்கப் பட்டாப் போல துண்டாடப் பட்ட இடமாய் அந்தப் பிரதேசம். மேலேறிச் செல்ல கற்கள் தாறுமாறாகக் கிடந்தன. சிலாட்களுக்கு பற்கள் இப்படி முளைத்து வளர்ந்து காணக் கோரமாய் இருக்கும். கோவில் மொத்தமுமே புதர் மண்டி செடி கொடிகளால் மூடி குகை மாதிரிக் கிடந்தது. சிலந்திகளின் வாசஸ்தலம். ஒட்டடை விலக்கிப் போக வேண்டும். சந்நிதியின் முன்னே ஒரு துரு பிடித்த காண்டாமணி. அதன் நாக்கு அசைவதை நிறுத்தி யுகங்கள் கண்டிருந்தன. பிறரது துக்கத்தை அறிவிக்கிற காண்டாமணி. அம்மனைக் கண்திறக்க இறைஞ்சுகிற காண்டாமணி. அதுவே, தான் பயன்படுத்தப் படாத துக்க அமைதியில் உறைந்து கிடக்கிறது. சந்நிதிக்குள் காளி. பத்ரகாளி. விளக்கு மா