Posts

Showing posts from May, 2022
Image
  May 2022 / பேசும் புதிய சக்தி இதழுக்கு நேர்காணல் உரையாடல் – நா. விச்வநாதன் பதில்கள் எஸ்.சங்கரநாராயணன்   Ø “எழுத்து என்பதே வாசகன் மீது Ø நிகழ்த்தப்படும் சிறிய வன்முறை.” ----- நிறைய நாவல்கள், சிறுகதைத் தொகுதிகள், கவிதைகள், கட்டுரைத் தொகுதிகள், மொழிபெயர்ப்புகள் எனப் போட்டிருக்கிறீர்கள். எல்லாமே வாசக கவனம் பெற்றவையாகவே இருக்கின்றன. இது ஒருவகையில் வெற்றி என்றாலும் எழுத்தின் நோக்கம் பூர்த்தியானதா? சாதனை எனக் கொள்ளலாமா? • என்னைப் பேட்டி என்று அழைத்ததற்கு நன்றியும் மகிழ்ச்சியும். ஆமாம். ஒருவேளை நிறையத்தான். எல்லாமாக ஒரு நூறு நூல்கள் இருக்கலாம். திரும்பிப் பார்த்தால் எனக்கே இது ஆச்சர்யம் தான். வாசகர்கள் மாத்திரம் அல்ல, என் பதிப்பாளர்களே (ஏறத்தாழ ஒரு டஜன்) எனது சிறந்த ரசிகர்கள், எனது மு தல் வாசகர்கள் அவர்களே. இது என் அதிர்ஷ்டம் என்றே கொள்ளலாம். கவனம் பெற்றவையாகவே இருக்கின்றன என் எல்லாப் படைப்புகளும், என நீங்களே அங்கீகாரம் அளித்தபின் வேறு யோசனை எதுவும் இந்தப் படைப்புகள் பற்றி எனக்குத் தேவை என்ன இருக்கிறது?   என் எழுத்தின் நோக்கம் பூர்த்தியானதா, என்றால், எழுத்தின் ஒரே நோ
Image
  பத்தி எழுத்து • நிசப்த ரீங்காரம் • பகுதி 7 சொற்களின் பகடையாட்டம் எஸ். சங்கரநாராயணன்   ஓ ர் எழுத்தாளன் என்ற அளவில் சொற்களை, அதன் கவித்துவ எழுச்சியுடன் நகர்த்தப் பிரியம் கொண்டவன் நான். என் பாணி அது. கதை சொல்லும் உணர்ச்சி வியூகத்தை வாசகனுக்குக் கை மாற்ற நான் எழுத்தில் வாசனை நிரப்புகிறேன். “அதிகாலைப் பனி மூட்டத்தில் கதவைத் திறந்தாள். வாசலில் அவன் நின்றிருந்தான். ஒரு கனவின் தொடர்ச்சி போல இருந்தது அது.” என்றாலும் மேடைப் பேச்சு சார்ந்து எனக்குப் பயிற்சி இல்லை என்ற வெட்கம் எனக்கு உண்டு. பணி என்று நான் சென்னைக்கு இடம் பெயர்ந்த காலங்களில் (தபால் தந்தித் துறை, என்கிற பி எஸ் என் எல்) எழுத்தும் என்னோடு இணைந்து கொண்டது. அப்போது (1980) ‘இலக்கிய வீதி’ என, இளம் எழுத்தாளர்களின் பாசறை ஒன்று விநாயகநல்லூர், வேடந்தாங்கலில் இயங்கி வந்தது. அதன் மாதாந்திரக் கூட்டங்கள் ஓர் உயர்நிலைப் பள்ளியில் மதுராந்தகத்தில் நடத்துவார்கள். அதன் அமைப்பாளர் இனியவன். (வணக்கம் இனியவன்.) அதில் இளம் எழுத்தாளர்கள் நாங்களும் பிற புத்தகங்களைப் பற்றி விவாதம் நிகழ்த்துவோம். அவை உப்பு பெறாதவை, என இப்போது புன்னகையுடன் நின