Posts

Showing posts from March, 2017
Image
அலுவலர் (நன்றி கல்கி வார இதழ்) எஸ். சங்கரநாராயணன் சி த்திரவேல் இன்றைக்கு பதவி ஓய்வு பெறுகிறார். வந்துவிடும் வந்துவிடும் என்று காத்திருந்த நாள், வந்தே விட்டது! உலகம் அதுபாட்டுக்கு இயங்கிக் கொண்டிருக்கிற மாதிரியும் தனக்குதான் வாழ்க்கை ஓய்வுபெறும் நாளைநோக்கி நாள்நாளாய்க் குறைகிறாப் போலவும் அவருக்கு இருந்தது. தினசரி கண் விழிக்கையிலேயே, இன்னும் எத்தனை நாள் இருக்கு, என்கிற யோசனையைத் தவிர்க்க முடியவில்லை. அட வரும்போது வரட்டும், என இருக்க முடியாமல் அலுவலகத்தில், ஓய்வுக்குப் பின்னான பென்ஷன் சார்ந்த விவரங்களைக் கேட்டு வாங்கிக்கொண்டே யிருந்தார்கள். ஞாபகப்படுத்திக் கொண்டே இருந்தார்கள். தாள் தாளாய்க் கையெழுத்திட்டுக் கொடுத்தார். திடீரென்று தான் அலுவலகத்தில் நிறைய வேலை செய்கிறாப் போலிருந்தது! மனைவியுடன் சேர்ந்து ஆறு புகைப்படங்கள் தந்தார். அவர்காலத்துக்குப் பின் ஓய்வூதியம் அவளுக்கு வரும். அவளும் வேலைக்குப் போகிறாள். தனியார் கம்பெனி. இவரைவிட மூணுவயசு தான் இளையவள். புகைப்படத்தைப் பார்த்தார். அவள் முதுமை அடைந்த மாதிரியே தெரியவில்லை. சதை வரம்பு மீறாமல், சத்தியத்துக்குக் கட்டுப்பட்டாப் போல
Image
இன்று 23 03 2017 காலமான திரு அசோகமித்திரனுக்கு அஞ்சலி. 1985 86 வாக்கில் குங்குமம் இதழில் அவர் எழுதிய கதை இது. என்ன அழுத்தமான பதிவு அல்லவா… இலங்கையில் நடந்ததாக ஒரு உண்மைக் கற்பனை இது… விடுவிப்பு அசோகமித்திரன்   க தவை மெதுவாகத்தான் ஆட்டினேன் என்றாலும் அந்த இரும்புக் கதவு எழுப்பிய உலோக ஒலி என் பற்களைக் கிட்டித்துப் போகும்படி செய்தது. பத்தொன்பதாம் நூற்றாண்டில் காலனியாதிக்கக் காரர்கள் ஊருக்கு வெளியில் கவர்னர் மாளிகைகள் கட்டும் அதே அக்கறையோடு ஊருக்கு வெளியில் சிறைச்சாலைகளும் கட்டினார்கள். வெள்ளைக்காரர்கள் காலத்தில் ஹேஸ்டிங்ஸிலிருந்து நான்கு நாட்களுக்கு ஒருமுறை ஒரு கைதி தப்பியோடி விடுவான். உலக யுத்தம் முடிந்த கையோடு வெள்ளைக்காரர்கள் ஆட்சி போய் விட்டது. இப்போது ஹேஸ்டிங்ஸ் சிறையில் இருப்பவர்கள் அநேகமாக எல்லாருமே அரசியல் கைதிகள். தமிழர்கள். எது பாதுகாப்பு - சிறையிலிருப்பதா வெளியிலிருப்பதா என்பது எங்களுக் குள்ளதோர் சந்தேகம். ஒரு காவலாளி வந்தான். என் இடதுகை இன்னமும் கதவின் கம்பியைப் பிடித்தவண்ணம் இருந்தது. நொடிப் பொழுதில் கையி லிருந்த தடியால் ஓங்கி அடித்தான். பொறுக்க முடியாத வலியால

Hunt your choice of book and read says Writer Sankara Narayanan | Manam ...

Image