Posts

Showing posts from February, 2021
Image
  குறுந்தொடர் / நன்றி லேடிஸ் ஸ்பெஷல் மாத இதழ் பறவைப்பாதம் பகுதி நான்கு   ச ட்டைப்பையில் அவளது கையெழுத்தில் அவளது தொலைபேசி எண்... என்பதே தனி உற்சாகம் தருகிறது. இதை ஹெச் எம் கிட்ட குடுத்திறவா?... அவருக்குதான் கல்யாணம் ஆயிட்டதே... என்றாள் பிருந்தா சிரிக்காமல். எனக்குந்தான் பிருந்தா.... என முணுமுணுத்துக் கொண்டார். பிருந்தா சிரிக்கிறாள். “எனக்கும் தான் மிஸ்டர்!” காதல் என்பது ஒரு வகை நட்பு. அது வெண்ணெயாய்த் திரட்சி காண்பதும் உண்டு. திருமணம் அதன் பெயர். என்றாலும் காதல்... அது ஒரு வாழ்வின் சுவை தானே. போட்டது தாயம், இறக்கிவிட்டது பாம்பு... என்கிறாற் போல, காலம் உருட்டிவிட்ட கணங்களில் திசை பிரிந்து தள்ளித்தள்ளி விழுந்து கிடந்தார்கள். இடையில் ஏ அப்பா, தலைமுறை அகழி. என் பெரிய பிள்ளை பிளஸ் ட்டூ. சின்னவன் எட்டாவது வாசிக்கிறான். உனக்கு எத்தனை குழந்தைகள் பிருந்தா? இரவில் அவர் உறங்கவில்லை. கண்ணை மூடிக் கிடந்தாலும் கண்ணுக்குள் அந்தப் பாவாடை சட்டை தாவணி பிருந்தா. அது ஒரு கனவு. நிஜமாக நடந்த ஒரு கனவு. ரெட்டைச் சடையுடன் கார்த்திகையன்று புடவை கட்டிய பிருந்தா. இளமை அவர்களை ஒரே போர்வையில
Image
  பறவைப்பாதம் எஸ்.சங்கரநாராயணன் குறுந்தொடர் / நன்றி லேடிஸ் ஸ்பெஷல் பகுதி மூன்று --- ரா ஜகோபால் சேஷாத்ரியை எதிர்பார்த்து மனம் படபடக்கக் காத்திருந்தார். மனசில் மப்பும் மந்தாரமுமான மழை மூட்டம். பிருந்தாவைப் பற்றி இவன் நேரில் வந்து சொல்லி யிருக்கலாம். அலுவலகத்தில் அப்படியா, என்கிறாற் போல கேட்டுக் கொண்டும் இருந்திருப்பார். தொலைபேசி உரையாடல், ஓர் கி’றுகிறுப்பு, இன்ப ஹிம்சை தந்துவிட்டது. நேரில் அவன் என் முன்னே இருந்தால் அவனுடனான இளமைக் காலத்தை அசை போட்டிருக்கும் அப்போது. அதெல்லாம் சும்மா... பனி இல்லாத மார்கழியா, என்கிற மாதிரி பிருந்தா இல்லாத பள்ளி நாட்களா? சேஷாத்ரி. என் தலையில் குட்டு வைக்கச் சொல்வார் வாத்தியார். என்னைக் குட்டிவிட்டு அவன் அழுவதைப் பார்த்து அவரே ஆச்சர்யப் படுவார். அந்த அழகான அருமையான கிடைத்தற்கரிய நிமிடங்ள் மேல் காலம் மழையும் வறட்சியுமாய் பருவங்கள் புரண்டு படுத்து செடியும் கொடியும் காடும் அடர்ந்து விட்டது. சாரி நண்பனே. இன்று நீ நேரில் வரும்போது, பிருந்தாவைப் பற்றி அல்ல. நம்மைப் பற்றிப் பேசி கொண்டாடுவோம். உன் நலம், உன் குடும்ப நலம் பற்றி நான் விசாரிப்பேன். உன் ப