சுருக்குவலை (The Purse Seine, 1937) ராபின்சன் ஜெஃபர்ஸ் • கடற்கரை வளைவில் ஒரு குன்று அங்கிருந்து பார்வைக்கு எட்டிய வரை மேலைக்கடலின் கரிய நீர்ப்பரப்பு நிலவின் மங்கிய வெளிச்சத்தில் கடல்மீன்களின் மின்வெட்டும் பளபளப்பு பால் சிந்திச்சிதறியது போல் ஒரு மீன்கும்பல் வட்டமிடும் இயந்திரப்படகில் இருந்து அதைநோக்கி வீசப்பட்ட சுருக்குவலை அது பரந்து மெல்லத் தாழ்ந்து வெண்ணிறத் திட்டின்மேல் விழுந்து அதன் திறந்த அடிப்பகுதியின் வட்டம் மீன்களை வளைத்து நீருக்குள் இறங்கி வேகமாகச் சுருங்கி இறுக்கிக்கொள்ள, சரக்கை படகுக்கு இழுத்த வலிய கரங்கள். எப்படிச் சொல்வதெனத் தெரியவில்லை அழகான ஆனால் அச்சுறுத்தும் காட்சி சிக்கிக்கொண்ட கடல்மீன்களின் கூட்டம் நீரில் இருந்து நெருப்புக்குள் பாய்ந்த அழகிய வடிவான வெள்ளிக்கத்திகள் வலையின் ஒரு புறத்தில் இருந்து எதிர்ப்புறத்துக்கு வாலை வேகமாகத் துடித்து நீந்தினாலும் வலையின் கயிறுகள் தான் எல்லை வேடிக்கை பார;த்த கடல் சிங்கங்கள் வானம்வரை இரவு விரித்த கறுப்புத்திரை அம்மீன்களுக்கு
Posts
Showing posts from July, 2017
- Get link
- Other Apps
தவளைக்கச்சேரி (கவிதைத் தூறல்) எஸ். சங்கரநாராயணன் எஸ்.சங்கரநாராயணனின் பிற கவிதை நூல்கள் • 01, கூறாதது கூறல் (கவிதை பம்பரம்) 02, ஞானக்கோமாளி (கவிதாப் பிரசங்கம்) 03, ஊர்வலத்தில் கடைசி மனிதன் (கவிதாஸ்திரம்) 04, திறந்திடு சீஸேம் (கவிதாவதாரம்) 05, கடவுளின் காலடிச் சத்தம் (கவிதை சந்நிதி) ம னுசாளுக்குக் கலகலப்பு முக்கியம். தைராய்டு, கூடவே இப்போது சர்க்கரை அளவும் உடம்பில் அதிகமாகி யிருக்கிறது. தலை கிர்ர் என்று உருமுகிறது. சுற்றுகிற சுற்றலில் கழுத்தைப் பிய்த்துக்கொண்டு பறந்துவிடும் போலிருக்கிறது. உடல் அசதி. சோர்வு. படபடப்பு. எதிலும் கவனம் இன்மை. கவனச் சிதறல். இதனூடே எழுதுகிற ஆசை, விடாத ஆசை. எழுத முடியாத ஏக்கம் வேறு. கதைகள், களங்களும் கருக்களும் என உள்ளே முட்டி மோதுகின்றன. ஓட முடியாத குதிரை நான். இப்போது மணல் கண்ட இடத்தில் புரண்டு தன்னை உரசி உற்சாகப் படுத்திக் கொள்ளும் முனைப்பு தட்டி இப்படியோர் எடுப்பு. மனசின் நிழலாட்டங்களை சிறு குறும்புடன் பதிவுகள் செய்தால் என்ன? உடல் சோர்வு தட்டும் போதெல்லாம் இப்படி நான இயங்கி வந்திருக்கிறேன்… இது எனது ஆறாவது நூல் இவ்வ
- Get link
- Other Apps
எம்எஸ்வி – மரபின் தொடர்ச்சியும் மீறலும் ச. சுப்பாராவ் ஒ ரு கலையின் வளர்ச்சிப் போக்கிற்கு மரபின் தொடர்ச்சியும், மரபை மீறுதலும் மிக அவசியமானதாக உள்ளன. ஒரு கலையில் புதிதாய் தன் திறமையைக் காட்டும் கலைஞன் ஆரம்ப நாட்களில் மரபைத் தொடர்வதும், தான் காலூன்றியதும், மரபை மீறி இன்னும் மேலெழும்பி சாதனைகள் புரிவதும் தொடர்ந்து நடந்து கொண்டே இருக்கிறது. கலைவடிவம் ஒன்றின் வளர்ச்சிக்கு, செழுமைக்கு இந்த இரண்டும் அவசியம் என்றாலும், மரபை நன்கு அறிந்தபின்பே மீறவேண்டும் என்பார்கள் அறிஞர்கள். சமீபத்தில் மறைந்த இசைமேதை எம்,எஸ், விஸ்வநாதனும் இந்த நடைமுறைக்கு விதிவிலக்கல்ல. அவரது மரபார்ந்த இசையும், மரபு மீறிய இசையும் பல தலைமுறை இசை ரசிகர்களுக்கும் தந்த பரவசத்தை நாளெல்லாம் சொல்லிக் கொண்டே இருக்கலாம். தமிழ் திரையிசையின் மரபு தவிர்க்க முடியாதபடி கர்னாடக சங்கீத மரபாகவே இருந்தது. அன்றைய திரைப்படங்களும் புராண, ராஜா ராணிக் கதைகளாக இருந்ததால் இந்த செவ்வியல் இசையும் மிகப் பொருத்தமாகவே இருந்தது. ஜி.ராமநாதன், சி,ஆர்,சுப்பராமன் போன்றோர் வழி வந்த விஸ்வநாதன் ராமமூர்த்தியும் இந்த மரபின் தொடர்ச்சிய