Posts

Showing posts from April, 2022
Image
  சிறுகதை நன்றி / சொல்வனம் 10 04 2022 இதழ் • செகண்ட் இன்னிங்ஸ் எஸ்.சங்கரநாராயணன்   பெ யர் கோமதிசங்கர். என்றாலும் முழுப் பேரும் சொல்லி எவன் கூப்பிடறான். அவங்க ஐயாவே “கோமதி… ஏல இங்க வா” என்றுதான் அழைக்கிறார். தன் பெயர் பொம்பளைப் பெயர்போல அமைந்து விட்டதில் அவனுக்கு வருத்தம் உண்டு. ஊரில் எலலாப் பயல்வளுக்கும் ஆம்பளைப் பெயரா அமைஞ்சிருக்கு. இவனுக்கு வெறும் சங்கர்…னு வெச்சிருக்கப்டாதா? பையன்கள் எல்லாரும் பேசிச் சிரிச்சி ஓடியாடி விளையாடற மட்டுக்கு ஜாலியாத்தான் இருக்கும். ஆனா திடீர்னு கேலி கிண்டல்னு பண்ண ஆரம்பிச்சிட்டாங்கன்னா, “போடி பொட்டை!” ஒரே வார்த்தையில் கரண்ட் ஆஃப். ஆனாலும் தனியா இருக்கிற போது அவன் பேரை நினைக்க அவனுக்கே சிரிப்பு. என்ன பேரு இது. பசு மாட்டுக்கு வெச்சா மாதிரி… இதே பேரு வேற யாருக்காவது இருந்திருந்தா அவனும் கிண்டல் அடிச்சிருப்பான். தெருவில் பாதிப் பிள்ளைங்களுக்குப் பட்டப் பெயர் வைப்பது அவன்தான். அவனது இந்தத் திறமைக்கு ஒரு ரசிகர் பட்டாளமே உண்டு. ரெட்டை மண்டை சுப்ரமணி. அவன் மண்டை கீறல் விட்ட தேங்கா கணக்கா டபுள் சைசா இருக்கும். மயில் ராமசாமி. அவன் கழுத்து சித்த உசரம
Image
  நன்றி / பே’சும் புதிய சக்தி சிந்தனைத் தொடர் – நிசப்த ரீங்காரம் / பகுதி 6   மழைக்குள் நுழைந்த குடை ஞானவள்ளல்   க லைஞனுக்கு நயம்பட உரைத்தல் முக்கியம். அவனது கூறுதிறனாலேதான் அந்தப் படைப்பு வாசக மனதில் பீடமிட்டு அமர்கிறது. சிறப்பாகச் சொல்லப்பட்ட ஓர் உவமை, அல்லது சிறப்பான ஓர் இசை என்றுகூட வைத்துக் கொள்ளுங்கள், மனதில் தங்கி ரீங்காரம் செய்ய வல்லது. அதன் கூறுதிறன் அவனது கலையெழுச்சி எனலாம். சில நல்ல ஸ்வரக் கோர்வைகளை மனது திரும்பத் திரும்ப பாடிப்பாடி ரசிக்கும் அல்லவா? எதுகை மோனை என்கிற சொல் அலங்காரங்களுடன் தமிழ் இலக்கியம் கலையின் எழுச்சியைக் கொண்டாடியது. சங்க இலக்கியம் முதல், போன நூற்றாண்டு வரை இந்தச் சொல்லாளுமை பெரும் ஆட்சி செய்தது. செய்யுள்கள் தாண்டியும் உரைநடையிலும், திரைப்படங்களிலுமே கூட அடுக்குமொழி பெரும் வரவேற்பு கண்டதை நாம் அறிவோம். திரைப்படங்கள் என்றால், ‘மகாதேவி’ படத்து வசனம் உடனே நினைவு வருகிறது. இணங்க மறுத்த பெண்ணை மூட்டையில் அடைத்துக் கொண்டுவரச் சொல்வான் பி.எஸ்.வீரப்பா. அவர்கள் தவறுதலாக அவனது மனைவியையே தூக்கிவந்து விடுவார்கள். மூட்டையைத் திறந்ததும் வெளியே வருவாள் அவனத