Posts

Showing posts from June, 2017
Image
மாயபிம்பம் அமர்நாத் (நாவலின் பகுதி) • 'ப்ரணவ்! இந்த வாரத்துக்கு என்ன?”   'என் ஜெர்மன் பாடத்தில் வந்த ஒரு கவிதை.  ஹெர்மன் ஹெஸ்ஸேயின் கற்பனை. படித்தவுடனே பிடித்துவிட்டது. அதை ஆங்கிலத்தில் எழுதிப்பார்த்தேன்.”   'எங்கே, காட்டு!” அவன் நீட்டிய காகிதத்தில். வாழ்க்கைக் கட்டங்கள் அரும்புகட்டி மலர்ந்து வாடும் பூக்கள் முதுமையைத் தேடிப்போகும் இளமை ஒவ்வொரு முடிவும் இன்னொன்றின் ஜனனம். ஒரு பருவத்தின் அறிவும் பெருமையும் தொடர;ந்து நம்முடன் வருவது நியாயம் இல்லை. நிகழ்காலத்துடன் பிரிவு எதிர;காலத்தின் வரவேற்பு. நாளை புதிய வார்ப்புகள், புதிய இணைப்புகள். ஒவ்வொரு ஆரம்பமும் ஒரு ஜாலம். அதுவே வாழ்க்கையின் சுவாசம். பழகிவிட்ட இல்லம் நமக்குச் சிறை. தினசரி வழக்கங்கள் கைகால் விலங்குகள். நிரந்தரம் நம்மைக் கட்டிக்காக்கும் காவல். வீட்டுக்கு வெளியே கைநீட்டி அழைக்கும் முடிவற்ற தொடுவானம், அதோ!  ஒரு கட்டம் அதில் அடுத்த கட்டத்தின் நுழைவாயில் வழிகாட்ட பிரபஞ்ச சக்தி. பரிச்சயங்களுக்கு விடைசொல்லி பயணத்தைத் தொடர ஏன் தயக்கம்? இறப்பும் ஒரு விடுதலை.  முடி
Image
திருவையாறு (நன்றி குங்குமம் வார இதழ்) எஸ். சங்கரநாராயணன்   க ண்மூடிக் கிடந்தாலும் சூட்சுமம் மெல்ல தாமரையாய் மலர்ந்தது. சூரியனை மனசு உள்வாங்கிக் கொண்டதோ. இது எந்த நாழிகை தெரியாது. ராம ராம என மனசில் துடிப்பு. கண்ணைத் திறக்கா விட்டாலும் மனம் முதலில் விழித்துவிட்டது. வெளியே எங்கோ பெயர் தெரியாத பறவை ஒன்று சிறகடித்து சிற்றொலி ஒன்றை எழுப்புவதைக் கேட்டார். ட்விட். தேன் சொட்டினாப் போல! என்ன ஸ்வரம் அது, என்று  மனசு யோசித்தது. உலகின் ஒலிகள் ஸ்வரங்களால் ஆளப்படுகின்றன. வாழ்க்கை சுருதியிலும் ஸ்வரங்களிலுமாகப் பிரித்தாளப் பட்டு பிணைக்கப் பட்டுக் கிடக்கிறது. பகலைவிட இரவின் பிரத்யேக ஒலிகள் அற்புதமானவை. பிசிறற்ற அவைகளின் துல்லியம் கவிதைத் திவலைகள். காற்றில் ஒலிகள் பிறந்தபோதே இசை உருவாகி விட்டது. ஒலி இசையாகிற போது மனம் இணக்கநிலைக்கு இளகிக் கொடுக்கிறது. மெல்ல எழுந்து உட்கார்ந்தார். கண்ணைத் திறக்கவில்லை. உள்ளங்கைகளைத் தேய்த்து சூடு பண்ணிக் கொண்டார். அப்படியே கண்ணில் வைத்துக் கொண்டார். உள்ளங்கைகளைப் பார்த்துவிட்டு எழுவது அவர் பழக்கம். புகைப்படப் பெட்டியைக் கருப்புத் துணி போட்டு மூடி யிருந்தது. வெளி