Posts

Showing posts from May, 2015

சிறுகதை - லா ரி

Image
சிறுகதை லாரி • எஸ். சங்கரநாராயணன் து ணிகள் என்று எடுத்துக் கொள்ள அதிகம் இல்லை. ஒரு கதர் வேட்டி, அரைக்கை ஜிப்பா. பொடி மட்டை, அது இல்லாமல் முடியாது. எடுத்துக்கொண்டார். பரபரவென்று பட்டையாய்த் திருநீறு பூசினார். கிளம்பிவிட்டார். வெளிய ரொம்ப குளிராக் கெடந்தது. செருப்பில்லாத கால்களில் பருக்கைக் கற்கள் குத்தின. இங்கேயிருந்தது கூத்தப்பாலம் மெய்ன் ரோடு வரை செண்மண் ரோடுதான். ஒரு சின்ன மழைக்கும் நாறிப்போகும். மனுசன் நட்க்க ஏலாது. மணி ஒண்ணு இருக்குமா? பன்னிரண்டு எப்பிடியும் தாண்டிருக்கும். தெரு நீண்டு வெறிச்சுக் கிடந்தது. சக்கரக் கோனார் தொழுவத்தில் சிவத்த நாய் குளிருக்காக எருமை மாட்டோடு ஓட்டிப் படுத்திருந்தது. உண்மையில் குளிர் அதிகம்தான். காலை எட்டிப் போட்டு நடக்கையில் வேட்டி விலகி, முன்வந்த காலில் குளிர் ஆவேசமாய்ப் பாய்ந்தது. காதிலிருந்து பீடியெடுத்துப் பற்ற வைத்தவாறே ‘ஓஹ்’ என்றபடி வானத்தைப் பார்த்தார். உப்புக் கட்டிய நார்த்தங்காய் மேகத் துணுக்குகள். குலுக்கி வீசப்பட்ட நட்சத்திரச் சோழிகள்... காற்றின் ஜில்லிப்பு தாங்காமல் முண்டாசை அவசரமாய்க் கீழே இறக்கி விட்டுக் காதுகளை ப

Book review நன்றி தளம் காலாண்டிதழ்

Image
Book review நன்றி தளம் காலாண்டிதழ் மெழுகுவர்த்தி  ஏற்றிய  அறைகள் * * எஸ். சங்கரநாராயணன் (‘தேவன் மனிதன் லூசிஃபர்‘. சைலபதியின் நாவல். 224 பக். விலை ரூ 150/-இராசகுணா பதிப்பகம் எண் 28 முதல் தளம் 36வது தெரு பாலாஜிநகர் விரிவு சின்னம்மாள் நகர் புழுதிவாக்கம் சென்னை 600 091 அலைபேசி – 91 94440 23182.) ஒ ரு தொண்டன் புதுக்கட்சி தொடங்குகிறான், சைலபதி வாசகனாய் இருந்து, பிறகு கதாநாயகனாக தானே ஆக முடிவு செய்த கணம் அது. இவரது முதல் நாவல் இது. இப்படி தனிக்கட்சி ஆசைக்காரர்கள் உடனே புதிய கொள்கைகளாக எதையோ சொல்லிவிட்டு, பின்னணியில் காமராஜர் காந்தி அம்பேத்கார் அண்ணா… என்று படங்கள் போட்டுக் கொள்வது வழக்கம். தமிழ் நாவல்களை ஆய்வு செய்து முனைவர் பட்டம் பெற்றவர் சைலபதி. இந்த நாவலின் பின், பைபிள், பிராமண சமூகம், கிறித்தவ சபை… என சில வளையங்களை அவர் சுழல விட்டிருக்கிறார். புராணங்கள், வரலாறுகள் சார்ந்து மறுவாசிப்பு பரிசீலனைகள் ஜோராக முன்னணிப் பட்ட காலம் இது. அசுரர்கள் என்பவர்கள் ஆதி பழங்குடிகள். அவர்கள் இடத்தில் போய் யாகம் செய்கையில் பிராமணர்களை அவர்கள் எதிர்த்தார்கள், என்று ஒரு பார

FICTION Kuwait

Image
* மூங்கில் தண்டு சாத் அல்சனௌசி (குவைத்) * தமிழில் எஸ். சங்கரநாராயணன் கா லி சிலிண்டரை மாற்ற வேண்டியிருந்தது. ஒரு மாலை. வாடகைக்காரை அமர்த்திக்கொண்டு பெரிய சந்தைக்குப் போனேன். ஜப்ரியா பகுதியின் ஒரு தெருவில் கடுமையான போக்குவரத்து நெரிசல். அங்கே எப்பவுமே ஜன நடமாட்டம் அதிகம் தான். ஆனால் இந்த நெரிசல், ஒரு காரும் ஒரு விரற்கடை போலும் நகரக் கொள்ளவில்லை, ஒரு விபத்தோ, பந்தோபஸ்து சோதனையோ இருந்தால் தான் இப்படி திணறல் ஏற்படும். நான் எதிர்பார்த்தபடி, தெருக்கோடியில் காவல்துறை கார்கள். மினுங்கும் அவற்றின் நீல சிவப்பு விளக்குகள். தெருவோரமாக காவலர். ஓட்டுநர் சீட்டு மற்றும் வாகன உரிமங்களைச் சரிபார்க்கிறார்கள்.      டாக்சி ஓட்டுநர் சன்னலைத் திறந்து தனது அடையாளக் காகிதங்களை நீட்டுகிறார். அதை சரிபார்த்த போலிஸ்காரர், அதைத் திருப்பிக் கொடுக்குமுன், என் அடையாள அட்டையைக் கேட்டார். என் கால்சாராய்ப் பைக்குள் கைவிட்டேன். என் பர்ஸ்... இல்லை. ச். கலவரமாய் இருந்தது. தெருவில் என் வீட்டின் திசை காட்டி அவரிடம் சொன்னேன். ''அதை என் அடுக்ககத்திலேயே விட்டுட்டு வந்திருக்கிறேன்.''

உத்தம வில்லன் பசிக்குத் தலையணை

Image
உத்தம வில்லன் • பசிக்குத் தலையணை • எஸ். சங்கரநாராயணன்   க மல் ஹாசனின் உத்தம வில்லன் பார்த்தேன். இதற்கு முன் பார்த்த படம் மணி ரத்தினத்தின் ‘ஓ காதல் கண்மணி.‘ ரெண்டு பேருமே புதுசாய்ச் செய்ய வேகம் கொண்டவர்களாய், அதனாலேயே கவனம் பெறுகிறார்கள். ரெண்டு படமுமே எதிர்பார்த்த அளவு, அதாவது அவர்கள் இருவரும் எதிர்பார்த்த அளவு கொள்வார் இலலாமல் ஆனவர்கள். ஒருவகையில், ரசிகர்கள் எதிர்பார்த்த அளவு அவர்கள் சொல்லவில்லை, என்பதும் இதன் பொருள் ஆகிறது. ஓ காதல் கண்மணி – பற்றி ஏற்கனவே எழுதியாகி விட்டது. ரெட்டைக்குதிரை சவாரி செய்ய முயற்சி செய்ய ஆசைப்பட்டிருக்கிறார் கமல். தப்பு என்ன இதில்? எத்தனை ரெட்டைதான் கதை இடங் கொடுக்கும் தெரிய வேணாமா? மூச்சுத் திணறுகிறது. சரித்திர சூழல் ஒண்ணு, நிகழ்காலத்தில் ஒரு பெரும் நடிகனின் கடைசித் தருணம், அதன் வாழ்வில் நெருக்கடிகள்… என ரெண்டாவது கதை… என்றால் அத்தோடு விட்டுறணும். தமிழ் தெலுங்கு மலையாளம்… என பாத்திரங்களைப் போட்டு வதக்கி சுவை சேர்க்கலாம் என நினைத்தார் பாருங்க. புரியாமை மற்றும் ஒட்டாமலேயே நகர்கிறது கதை. சரித்திரக் கதை கதாநாயகனைச் சுற்றி நகர மறு

திரைப்பட விமரிசனம்

Image
திரைப்பார்வை -  எஸ். சங்கரநாராயணன் • • • கூ ரை ய ற் று தூண்கள் மட்டும்… * மு ற்றிலும் தற்காலத் தளத்தில் நிகழ்கால சூட்டோடு, இன்றைய இளைஞர்களின் மனப் போக்குகளை இயல்புப்படுத்தி, அதில் ‘கல்யாணம் வேணாம். சேர்ந்து வாழ்வோம்‘ என்கிற, அவர்களிடையே கிளைத்துவரும் புதிய சிந்தனையை அடையாளப்படுத்தி கதை வளர்கிறது. இந்தக் கதையை இன்றைய இளைய இயக்குநர்களில் ஒருவர் எடுத்திருக்க வேணாமா? (தாடி மீசை குடி குத்துப்பாட்டு, காதலுக்கு மல்லிகை நிறைய வைத்திருக்கும் கூந்தலை உடைய கிராமத்துப் பெண்ணிடம் வம்பு… என இளைஞர் பட்டாளம், ஜாலியா படம் எடுக்கிறது.) இதை எடுக்க, அதை வெற்றிகரமாய் அவர் செய்திருக்கிறாரா, என்பதை விட, அவர்தான் இதைச் செய்தார் என்பது சிறப்பு. மணி ரத்தினத்தை அதற்காகவே நாம் கவனிக்க வேண்டும். என்ன சொல்கிறார் மணி ரத்தினம்? லிவிங் டுகெதர், சரியா? சரியா வருமா? “அப்படியெல்லாம் இல்லை. கல்யாணம் பண்ணிக்கொண்டு குடித்தனமாய் வாழ்வதே சுபிட்சம்“ என்கிறார் மணி ரத்தினம். அதை இந்த இளைய பாத்திரங்கள் ஒத்துக்கொள்ள மறுக்கிறார்கள். ஆனால் இந்த இரண்டு இளவட்டங்களையும் ஒரு பெரு மழையில் அல்லாட விட்டு மாத்தி மாத்