Posts

Showing posts from November, 2020
Image
  சூரரைப் போற்று   ஆனந்த விகடனில் புதிய ஆத்திசூடி என்று பாரதியாரின் வரிகளை அடிப்படையாக் கொண்டு சிறப்புச் சிறுகதை எழுத வாய்ப்பு அளிக்கப் பட்டபோது ”சூரரைப் போற்று” என்ற புதிய ஆத்திசூடியை வைத்து நான் எழுதிய சிறுகதை இது.   ஆனந்த விகடன் பொக்கிஷம் பகுதியில், அதை மீள் பிரசுரம் செய்திருக்கிறார்ள். காட்டு மனிதர்களும்  நாட்டு மிருகங்களும் ---- விகடன் டீம் ஆனந்த விகடன் பொக்கிஷம் சிறுகதை. 22-11-1998 ஆனந்த விகடன் இதழில் வெளியான சிறுகதை * ஊரே துக்கமாக இருந்தது. சலூனிலோ, டீக்கடையிலோ, தேர்முட்டியிலோ... மக்கள் வருத்தமாக ப் பேசிக்கொண்டார்கள். 'அடடா சாமுண்டி மாட்டிகிட்டான் போல....' பத்து பன்னிரண்டு கிலோ மீட்டருக்கு அந்தப் பக்கம் சுருளி மலை காடு. சாமுண்டி அங்கேதான் ஒளிந்திருந்தான். ஒருமுறை பத்திருபது போலீஸ்காரர்கள் துப்பாக்கியும் தோட்டாவுமாக உள்ளே புகுந்து தேடிப் பார்த்தார்கள். காடு முழுக்க அலசிப் பார்த்தாகிவிட்டது. சலித்துப் பார்த்தாகிவிட்டது. சாமுண்டியைக் காணவில்லை. போலீசுக்கே அலுப்பாகிவிட்டது. ஒரு சலனமில்லை. ஒரு அசைவுமில்லை. அவன் இங்கே இல்லை என்று முடிவு செய்து போலீஸ் திரும்ப
Image
  2006 ம் ஆண்டின் சிறந்த நாவல் - தமிழக அரசு பரிசு பெற்றது நீர்வலை எஸ்.சங்கரநாராயணன் 11 நி றைய ஓய்வு நேரம் கிடைத்தது இப்போது. பட்டறை என்பது அடைத்துப் போட்டாற் போலிருந்தது. அச்சக வேலை என்றால் பெரும்பாலும் வெளியே சுற்றவேண்டிய வேலை. சட்டென சுதந்திரம் பெற்றாப்போல ஒரு விடுதலை உணர்வு. சிறகு முளைத்த உற்சாகக் கும்மாளம். அழகர் ஆத்ல இறங்கினதைப் பார்த்தாப்லயும் ஆச்சி. அண்ணனுக்குப் பொண் பார்த்தாப்லயும் ஆச்சி - என பழமொழி! விதவிதமான அனுபவங்கள். கல்யாணப் பத்திரிகையைப் பிரித்துப் பார்த்து அசட்டுச் சிரிப்பு சிரிக்கும் மணப்பெண். இழவு சமாச்சாரப் பத்திரிகையில் இறந்தவர் படம் சின்னதாகி விட்டதாக ஓர் அங்கலாய்ப்பு. கல்யாணத்தில் வாழ்த்துப்பா, என்று நூறு இருநூறு, அவசர நோட்டிஸ்கள். திடீரென்று எவனுக்காவது கற்பனைவளம் பெருகி - மடை உடைந்து, அல்லது நட்டு லூசாகி... எதாவது கிறுக்கிவந்து கொடுப்பான். உடனே அச்சடித்து கல்யாணப் பந்தலில் டெலிவரி தர வேண்டும். ஒரு கல்யாணத்தில் வாழ்த்துப்பா வாசிக்கு முன்னாலேயே, மாப்பிள்ளை பார்ட்டிக்கும் பெண் வீட்டுக்காராளுக்கும் சண்டை. வரதட்சிணைப் பிரச்னையா தெரியவில்லை. நடுவில் இவன்
Image
  2006ம் ஆண்டின் சிறந்த நாவல் - தமிழக அரசு பரிசு   நீர்வலை எஸ்.சங்கரநாராயணன்   9 ப டிப்பு வராதவர்கள் என்று ஒதுங்கியவர்களே அங்கே ஒர்க்ஷாப்பில் இருந்தார்கள். அப்பாவுக்கு இராணுவ பென்ஷன் என்று வந்தபோதிலும், மருந்துகளுக்கே பத்தாத நிலை. நாலுபேரை நம்பி, கடன் கொடுத்து வாங்கி, ஏகப்பட்ட சிக்கல்களில் அப்பா மாட்டிக்கொண்டு, கடனை அடைக்க வட்டியே ஆளை வீழ்த்தி... வாழ்க்கை திசைதடுமாறிய படகாக திணறிப்போனது. அப்பா உடம்பு மிலிடரி உடம்பு என்று சொன்னால்கூட நம்ப முடியாதிருந்தது. மிலிடரி ஓட்டல் சர்வர் உடம்புடா - என்று கிண்டல் செய்யும்படியாய் ஆகியிருந்தது! அப்படி அவனுக்கும் ஒண்ணும் படிப்புதாகம் என்றெல்லாம் இல்லை. சரி, என்று பாடப்புத்தகத்தை எடைக்குப் போட்டான். சோன்பாப்டி கிடைத்தது. அவன் புத்தகத்தையே கிழித்து, கட்டிக்கொடுத்தான் வண்டிக்காரன். நாலு பக்கமும் கோட்டைபோல் நெளி நெளியாய் தகரமறைப்பு கண்ட பெரிய வளாகம்தான். மணி டிரான்ஸ்போர்ட். தனியார் பஸ் டவுண்பஸ் சர்வீஸ் ஒன்று முதலாளிக்கு இருக்கிறது. தனியே வேறு தெருவில், லாரி பார்சல் ஆபிஸ். ரெண்டு மூணு லாரிகள் லோடு அடித்தன. ஒரு லாரி அண்ணன் கையில். தவிர வேறு கனவா