Posts

Showing posts from August, 2017
Image
நன்றி ‘சங்கு’ காலாண்டிதழ்/சிறுகதை புரவிக்காலம் எஸ். சங்கரநாராயணன் கௌ டில்யன் (சொந்தப் பெயர் சங்கரராமன்.) நாளைக்குள் அடுத்த அத்தியாயம் தர வேண்டும். சரித்திரக் கதை என்று பெயர் சொன்னாலும், பாண்டியன் என்றோ பல்லவன் என்றோ அவர் சொல்வது ஒரு கால அம்சம் சார்ந்ததே தவிர, அரசர்கள் எல்லாரும் ஒரே மாதிரிதான் காரியம் ஆற்றினார்கள். குதிரையில் அவர்கள் ஏறிவிட்டால் அதை மெதுவே ஓட்டிச் செல்வார் எவரும் இல்லை. அவர்களது படையில் பெரும் மல்லர், வில் வித்தகர், தேர் ஓட்டிகள் இருந்தார்கள். என்றாலும் வீர விளையாட்டுப் போட்டி என்று வரும்போது அரசர் அவர்களையே ஜெயித்தார். சனங்கள் அரசரை மெச்சி பூரித்து ஆர்ப்பரித்தார்கள். போர் என்றபோது இந்தத் தளபதிகள் முன்னே சென்றார்கள், என்பது விசித்திர முரண். கௌடில்யன் சரித்திரக் கதை மாத்திரமே எழுதி வந்தார். அவரது புதிய தொடர்கதை ஆரம்பிக்கிறது, என அறிவிப்பு வந்தாலே அந்த இதழின் விற்பனை அதிகரிக்கிறது. காரணம் அவர் எழுதும் சரித்திரக் கதைகளில் சரித்திரத்தை விட சிருங்கார ரசமே மேலோங்கி நிற்கிறது. வாசகர்கள் அவற்றை வாசித்து ஹா என வியந்து பிரமித்தார்கள். அவர் எழுதும் கதைகளின் அரசிகள்
Image
மின் கம்பிக் குருவிகள்   எஸ். சங்கரநாராயணன் • ஒரு விரல் உலகைப் பார்த்து நீட்டும் போது மத்த மூணு விரல்கள் உன்னையே காட்டுகிறது என்பார்கள். அதைத் தவிர்க்க முடியாது. பிறரைப் பற்றி எழுதுவதான பாவனையில் மிக்கவாறும் தன்னையே காட்டிக் கொடுத்து விடுகிறது எழுத்து. அதற்கு ஓர் எழுத்தாளன் தயாராய் இருக்க வேண்டும். காலப்போக்கில் ஒரு வேடிக்கை போல அந்த எழுத்தின் அடிநாதமான விமரிசனக் குரலை அவன் தன் வாழ்க்கை பாவனைகளாக ஆக்கிக்கொள்ள உந்தப் படுகிறான். அது ஏற்கனவே அப்படித்தான் இருக்கிறது. முதல் நிலை, இந்த பாவனைகளில் இருந்து தான் அநத எழுத்து பிறக்கிறது. அடுத்த நிலை, எழுத்து என்று சகஜப்பட்டான பின், எழுத்தில் இருந்து இவனுக்கு ஒரு கிரண வீச்சு கிடைக்கிறது. பெறும் நிலைக்கு, வாசக நிலைக்கு அவன் மீண்டும் வந்தமைகிற வேளை அது. எதனால் எழுதுகிறேன்? அப்படி அலலாமல் வேறு எவ்வாறும் என்னை, என் இருப்பை என்னால் நியாயப் படுத்திக் கொள்ள முடியாது என்று தோன்றுகிறது. நான் ஒரு அலுவலகப் பணியாளி. பிணியாளி. இது பிணிக்கப் பட்ட பணி. அன்றாடங்களின் ஒழுங்கு அதில் உள்ளது. ஆனால் வாழ்க்கை? அது ஒழுங்கற்று நேர்ப் பாதையாய் அல்லாமல் முப