Posts

Showing posts from August, 2021
Image
 நன்றி / கவிதை உறவு ஆண்டு மலர் 2021 பாதுகாப்பு எஸ்.சங்கரநாராயணன்  • கா ர்த்திகேயன் இறந்துவிட்டார், என்று கேள்விப்பட்டதுமே, அடாடா, என்று அவருக்கு மைதிலி ஞாபகம் வந்தது. மைதிலி நெருங்க முடியாத தேன்கூடாய் இருந்தாள் அவருக்கு. அது ஒரு காலம். இப்போது மைதிலிக்கே கல்யாணம் ஆகி இருபது இருபத்தியிரண்டு வயதில் ஒரு பெண் இருக்கிறாள். அவள் பெயர்கூட... அதைப்பற்றி என்ன, அவள் மைதிலியின் பெண். அது போதும். அதைவிட வேறென்ன அடையாளம் வேண்டும். பெண்களில் மைதிலி, அவளே தனிப்பெரும் அடையாளம். மைதிலி ஞாபகம் தன்னில் கமழும் தோறும், தான் இளமையாகி விடுவதாய் அவர் உணர்ந்தார். எல்லா ஆண்களுக்குமே அப்படித்தான் இருக்கும், என ஒரு புன்னகையுடன் அவர் நினைத்துக் கொள்வது உண்டு. ஆண்களுக்குப் பெண்கள் வாசனை வியூகம் தான்! அதாவது காதல் வயப்பட்ட ஆண்களுக்கு. வாசனை என்று கூட இல்லை. அவள் சார்ந்த ஓர் அந்தரங்கபூர்வமான விஷயம், எனக்குத் தெரியுமாக்கும், என்பது மகிழ்வூட்டுகிறது அவர்களை. அந்த அலுவலகம் மைதிலிவாசனையால் நிரம்பி வழிந்தது ஒரு காலம். தலைநிறைய பூ வைத்த மைதிலி. கருப்புச் செடியில் பூத்த மல்லிகையாட்டம். சிரிக்கும்போது எந்த அளவு உதடு வி
Image
  சிறுகதை / நன்றி அமுதசுரபி / ஆகஸ்டு 2021 ப ற வை வ ம் ச ம் எஸ்.சங்கரநாராயணன்   அ ப்பாவின் ஊர் தாமிரவருணிக் கரை. ஊர்சார்ந்த பேச்சும் நினைவுகளும் எப்பவுமே அப்பாவுக்குப் பிடிக்கும். தனது பழைய நாட்களை நினைக்கும்தோறும் அவர் முகத்தில் தோன்றும் புன்னகையை, பிரகாசத்தை ரவி ரசிப்பான். சில இரவுகளில் கரன்ட் கட்டாகி எல்லாரும் மொட்டைமாடியில் படுத்துக் கொள்வார்கள். அப்பாவுக்கு அந்த வெளிக்காத்து ரொம்ப இஷ்டம். சாதாரண நாளிலேயே இரவில் சாப்பிட வருமுன் மொட்டைமாடியில் உலாத்திக் கொண்டிருப்பார். படுக்க என்பது இன்னும் விசேஷம். தூக்கம் வராமல் அப்பா எதாவது பேசிக் கொண்டிருப்பார். மகன் மேல் அபார பிரியம் உள்ள அப்பா. அது சுஜாதாவுக்குத் தெரியும். அவள்அப்பா இத்தனை ஒட்டுதலாய் எல்லாம் நடந்து கொண்டது இல்லை. பெண்பிள்ளை என்று சற்று விலக்கம் காட்டி யிருக்கலாம். அண்ணா ரமணியும் அவள்அப்பாவும் கூடத்தில் படுக்க சுஜாதா தன் அம்மாவுடன் உள்ளறையில் படுத்துக் கொள்வாள். இந்த வயசிலும் அவள் கணவன் ரவி அப்பா அருகில் அவரைக் கட்டிக்கொண்டு படுத்திருப்பான். இன்னும் அவன் அப்பாகோண்டு. அவளுக்கு ஆச்சர்யமாய் இருக்கும். “பக்கத்துக் கருங்குளம் க
Image
நன்றி பேசும் புதிய சக்தி ஆகஸ்டு 2021 இதழ் அரசனும் குடிமக்களும் எஸ்.சங்கரநாராயணன் •   தா த்தா இந்த வீட்டுக்கு செக்யூரிட்டி வேலைக்கு என்று சேர்ந்து இரண்டு மாதம் ஆகப் போகிறது. 12 மணி நேர வேலை. சம்பளம் என்று நாலாயிரம் தருகிறார்கள். முதலில் என்ன இது, அவ்வளவுதானா… என்று இருந்தது. அங்கேயே தங்கிக் கொள்ளலாம், என்பது சம்பளத்தை விட பெரிய விஷயமாய் கணபதிக்கு இருந்தது. மற்றபடி இரண்டு வேளை தேநீர், மூணு வேளை உணவு அங்கேயே தந்து விடுவது பெரிய உபகாரம். ஒரு பையன் அவருக்கு. தானே ஒரு பெண்ணைக் கல்யாணம் பண்ணிக்கொண்டு வந்தான். பின் பெண்டாட்டி பேச்சைக் கேட்டுக்கொண்டு அவரை வேறு வீடு, வேறு வேலை பார்த்துக்கொள்ளக் கூசாமல் சொல்லிவிட்டான். பெத்தவர்கள்தான் பையனை, கல்யாணம் ஆனதும் தனியே போகச் சொல்வார்கள். இங்கே தலைகீழ்க் கதை. யாரையும் எதிர்த்துப் பேசாதவர் அவர். தன்பக்க நியாயத்தைக் கூடக் கேட்கத் தெரியாது. எங்கே போக, என்ன செய்ய என்று திகைப்பான நிலையில் இந்த செக்யூரிட்டி வேலை வரப் பிரசாதம் அல்லவா? வயதான காலத்தில் வாழ்வதே கடவுளின் சித்தம் என்றாகி விட்ட நிலை. பெரிய காம்பவுண்டு வளாகம். தள்ளி பின்னே கார் நிறுத்த இடம் உண்