SHORT STORY ஆயிரம் தலைபார்த்த அபூர்வ சிகாமணி எஸ். சங்கரநாராயணன் அ வனது தொழில் பூர்விகம் ஆலமரத்தடி. நாற்காலி போட்டு துண்டு போர்த்தி பூபாலன் முடிவெட்ட இவன் கண்ணாடி பிடிக்க வேண்டியிருக்கும். டவுசர் அவிழும். இடக்கையால் டவுசரைப் பிடித்துக்கொண்டு வலக்கையால் கண்ணாடியைத் தூக்கி முகத்துக்குக் காட்டுவான். பராக்கு பார்த்தபடி ஒருமுறை டவுசர் நழுவுகிற பதட்டத்தில் வலக்கையால் பிடிக்கப்போக கண்ணாடி கீழே விழுந்த சிலுங்... அத்தோடு அந்த வேலையும் போயிற்று. பிறகு சலூன் சலூனாக மாறி, நரை மண்டை, புல்லு மண்டை, ரெட்டை மண்டை, கோண மண்டை என்று விதவிதமான மண்டைகளைப் பார்த்துத் தொழிலில் தேறினான் சிகாமணி. அவன் பட்டணம் கிளம்பி வந்தது இப்படி சலூன் வைக்க அல்ல. கலைத்தாய்க்கு சேவை செய்ய. சினிமாவில் சேர எல்லா இளைஞர்களையும் போலவே அவனுக்கும் அபிலாஷைகள் இருந்தன. இராத்திரியில் முன்னணிக் கதாநாயகிகள் அவனை எழுப்பி ‘வா, என்னோடு டூயட் பாடு. சேவை செய்ய வேண்டிய இளம் வயதில் தூங்கினா என்ன அர்த்தம்?’ என அவன் கையைப் பிடித்து இழுத்தார்கள். குறைந்தபட்சம் ஒரு ரஜினி ஆகிவிட அவனுக்கு அபிப்ராயம் இருந்தது. பஜார்ப்பக்கம் சலூன் போட்
Posts
Showing posts from October, 2016
- Get link
- Other Apps
DINAMANI DEEPAVALI MALAR 2016 * காந்தி கண்ணாடி எஸ். சங்கரநாராயணன் கு ன்றத்தூர் தாண்டி சேட்டின் தனி பங்களா. சினிமா படப்பிடிப்புகள் நிறைய அங்கே நடக்கின்றன. எல்லா இந்திய மொழியிலும் அங்கே வந்து படம் எடுக்கிறார்கள். இந்தமொழி இயக்குநர் அந்தமொழிப் படத்தில் வேலை செய்கிறார். கையில் துட்டு நிறைய வந்தவுடன் படம் எடுத்து நஷ்டப்பட நிறையப்பேர் வந்துவிட்டார்கள். காரணம் படம்எடுப்பதில் படம்எடுப்பதைத் தாண்டி அநேக சமாச்சாரங்கள் இருக்கின்றன. தவிரவும் இதில் பணம் சம்பாதித்தால் திரும்ப நஷ்டப்பட்டு ஓட்டாண்டி ஆக்கித்தான் அது உன்னை வெளியே விடும். பணம், பண வெறி, வெற்றிக்கான வெறி… என்று உக்கிரமாகிக் கொண்டே போகும். விளக்கின் அபார வெளிச்சம் பண்ணும் வேலை அது. அதனால் வரும் புகழ் தரும் போதை அது. புகழைத்தந்து அதை அது அடுத்து பிடுங்கிக்கொண்டும் விடுகிறது. தொழில் அப்படி. இதில் இன்னொரு வேடிக்கை ஒரு படம் ஜெயித்தால் அது ஜெயித்த காரணம் யாருக்குமே புரிபடுவதே இல்லை. ஒவ்வொருவரும் ஒவ்வொரு காரணம் சொல்கிறார்கள். தாங்கள் கண்ட காரணத்தில் அடுத்து உடனே படங்கள் தந்து அவர்கள் பாவம் அழிந்தும் போகிறார்கள். அதனால் படம் எ
- Get link
- Other Apps
NAVINA VIRUTCHAM 100TH ISSUE SHORT STORY மு து வே னி ல் எஸ். சங்கரநாராயணன் ஸ்ரீ நிதிதான் அவன்மேல் ஆசைப்பட்டாள். ராஜாராமனுக்கு காதல் ஒரு விநோதமான அனுபவமாய் இருந்தது. அவள் திடீரென்று அவனிடம் இப்படிப் பேசுவாள் என அவன் எதிர்பார்க்கவே இல்லை. (ஒருவேளை அவள் இப்படிச்சொல்ல அவன் அடிமனசில் ஆசைப்பட்டும் இருக்கலாம்.) அவனும் ஸ்ரீநிதியும் பக்கத்துப் பக்கத்து அலுவலகங்களில வேலை பார்க்கிறார்கள். பத்துபதினைந்து அலுவலகங்கள் இயங்கும் பெரியவளாகம் அது. மதியநேரம் சிலசமயம் சாப்பாடு எடுத்து வரவில்லை என்றால் அவன் கேன்ட்டீன் போக நேர்ந்தால் அவளை அகஸ்மாத்தாக சந்திப்பது உண்டு. வாய்வலிக்கிற அளவு எப்பவும் ஸ்ரீநிதி சிரித்துக்கொண்டே இருந்தாள். மாலை மூணரைமணி வாக்கில் தேநீர்நேரம் என்று அவன் கான்ட்டீன் வந்தால் தவறாமல் அவளும் வருவாள். அவள்அலுவலகத்தில் இருந்து சன்னல்வழியாக கான்ட்டீன் தெரிந்தது. அவனை அவள் பார்த்துவிட்டு தற்செயல்போல வருகிறாள் என்று பிறகு தெரிந்துகொண்டபோது வேடிக்கையாய் இருந்தது. பிறகு அவனே கான்ட்டீன் சன்னல்பக்கம் வந்து நின்றபடி மேலேபார்க்க ஆரம்பித்தான். தன் செயலையிட்டு அவனுக்கே சிறிது வெட்கமாகவும
- Get link
- Other Apps
நன்றி - பேசும் புதிய சக்தி - அக். 2016 கப்பல் எஸ். சங்கரநாராயணன் • ர த்தினத்துக்கு அப்பாவைப் பிடிக்காது. அவர்கள் அப்பாவழி வந்தவீட்டையும் அவன் பிறக்குமுன்பே விற்றுத் தீர்த்துவிட்டிருந்தார் கணபதி. ஊதாரி. அத்தோடு குடிப்பழக்கமும் இருந்தது அவரிடம். வாழ்க்கை என்பது பாடுபட வேண்டிய ஒன்று அல்ல. அனுபவிக்க வேண்டியது அது. நல்லா பாட்டெடுப்பார் அவர். வீட்டுத் திண்ணையில்தான் வாசம். ரத்தினத்துக்கு நினைவு புரிபட ஆரம்பித்த காலத்தில் இருந்தே அவன் அப்பாவிடம் கண்டிப்பு காட்டினான். ஊர்ல நாலு பேர் பாத்தா சிரப்பாங்கடா, என்கிற அம்மாவின் எதிர்ப்பையும் மீறிச் சொல்லிவிட்டான். “இனி அப்பா வாசல் திண்ணையிலேயே தங்கிக்கிறட்டும். வீட்டுக்குள்ள வரப்டாது” என்றான். சின்னப்பையன். அப்போது அவனுக்கு வயது பத்துப் பதினொன்று இருக்கும். தினசரி கண்மணி அண்ணனுடன் எலட்ரி வேலைக்குப் போனான். கண்மணி அண்ணன் “குடிக்க தண்ணீர் கொண்டு வாடா” என்பதை “வாட்டர்ஃப்ரூப் எடுத்துவா” என்று சொல்லும். “எழுந்திருடா” என்பதையே கூட “கெட் அப் ஏர்லி இன் தி மானிங்” என்பான் அண்ணன். கணபதியை யாராலும் மாற்ற முடியவில்லை. தண்ணி போட்டாக வேண்டும் தின