Posts

Showing posts from April, 2015

உலக இலக்கியம் - நட் ஹாம்சன் (நோர்வே)

Image
நடையழகினாலும், புதிய தளங்களைப் கையாண்டதாலும் பரவலாகப் புகழ்பெற்றார் நட் ஹாம்சன். 1920ல் இலக்கியத்துக்கான நோபல் பரிசு அவருக்கு வழங்கப்பட்டது. சாதாரண ஒரு  சராசரி ஈயின் கதை • • • நட் ஹாம்சன் (நோர்வே) நா ன் எழுதிக்கொண்டிருந்தேன். திறந்திருந்தது ஜன்னல். ஜன்னல்வழியே அந்த ஈ உள்ளே வந்தது. ஆக எங்கள் சிநேகம் ஆரம்பமானது. ஈ என் தலையைச்சுற்றி ஒரு ஆட்டம் போட்டது.  தலையில் அல்கஹால் பூசியிருந்தேன். அந்த வாசனைக்குதான் அதற்கு அப்படியொரு கிறுகிறுப்பு. கையைவீசி, போ அந்தாண்ட,,, என அதை விரட்டி... எதையும் அது சட்டை பண்ணவில்லை. அப்புறம்தான் காகிதம் வெட்டும் கத்திரிக்கோலைக் கையில் எடுக்க முடிவுசெய்தேன் நான்.      நல்ல பெரிய, அருமையான கத்திரிக்கோல். இன்ன உபயோகம்னில்லை, எனது புகைக்குழாயைக் குடைந்து சுத்தம்செய்ய, நெருப்பைச் சீண்டிவிட என்று கண்டபடி அதை நான் பயன்படுத்துகிறேன். சுவரில் ஆணியடிக்கக்கூட அதால் மண்டையில் நச்சென்று போடுகிறேன். பேணிப் புழங்கிய என் கைலாவகத்தில் பயங்கரமான ஆயுதம் அது. அதைக் காற்றில் விஷ் விஷ் என வீசினேன். ஈ பறந்து வெளியே போய்விட்டது.      ஆனால் கொஞ்சநேரத்திலேயே

உலக இலக்கியம் சுவிஸ

Image
கேளா ஒலிகள்  கேட்கிறவள் பீட்டர் ஸ்டாம் (சுவிட்சர்லாந்து)   ஜெர்மானிய மொழியில் இருந்து  ஆங்கிலத்தில் (Expectations)  மைக்கேல் ஹோஃப்மன் தமிழ் வடிவம் எஸ். சங்கரநாராயணன்  • • •   நீ ங்கள் நம்ப முடியாமல் இருக்கலாம். ஆனால் எத்தனையோ சப்த களேபரங்களின் நடுவே ஒரு தனி ஒலிக்குறிப்பை என்னால் பிரித்தறிய முடியும். பேரோசை என்றில்லை சின்ன சிணுக்கம். அதைக்கூட நான் அறிந்துகொண்டு விடுவேன். ஒலிகளுக்காக என் காதுகள் ஆர்வப்பட்டுக் காத்திருக்கின்றன. சவாலாய்க் கூடச் சொல்வேன். மத்தவர்கள் கேட்காத ஒலிகளைக் கூட நான் துல்லியமாக அறிவேன். இந்த அடுக்கக மேல்தளத்து தரைப் பலகைகளின் அதிர்வொலிகளை இங்கே சாப்பிட வருகிறவர்கள் கேட்டிருப்பார்களா சந்தேகமே. எதுவும் நடக்காத மாதிரி அவர்கள் பேச்சு சுவாரஸ்யத்தில் இருப்பார்கள். அரட்டையும் சிரிப்புமாய் அவர்கள் நான் கொடுக்கும் ஒயினை அருந்தி நான் சமைக்கும் உணவு வகைகளைச் சாப்பிடுகிறார்கள். நன்றி என்றோ, சூப்பரா இருக்கு என்று ஒரு பாராட்டோ இதுவரை அவர்கள் என்னிடம் சொன்னது கிடையாது. இங்கே வந்து என் உணவைச் சாப்பிடுவதே அவர்கள் எனக்குச் செய்கிற உபகாரம் என நினைப்பு அவர்களுக்கு.

ஆளுமை ஜெயகாந்தன்

Image
அஞ்சலி ஜெயகாந்தன் அரியணை அனுமன்கள் தாங்க • எஸ். சங்கரநாராயணன் ஜெ யகாந்தன் இறந்துவிட்டார். கேள்விப்பட்டவுடன் ஆச்சர்யமான விஷயங்கள் நினைவில் அலைமோதுகின்றன. லா.ச.ரா., சுஜாதா போன்ற பேராளுமைகளைப் போன்றே ஜெயகாந்தனும் சாமான்ய வாசக மகா சமுத்திரத்தில் அலைக் கிளர்ச்சிகளைத் தோற்றுவிக்கிறார்கள். கேள்விப்பட்டு பிறகு ஜெயகாந்தனை வாசிக்க இன்றைய தலைமுறை வந்திருக்கும். அவரது எழுத்தின் நேர்மை, அவர் விவாதிக்கும் பொறுப்பு, அப்புறம் அந்த மகா எணிமை போன்ற அம்சங்கள் இன்றைய இளைஞர்கள் வரை அவரை கவனிக்க வைத்தன. தொடர்ந்து முப்பது நாற்பது வருடங்களாக அவர் பெரிதாய் எழுதிவிடவில்லை. ஆனாலும் எழுத்துலகில் அவரது இடம் எப்படியோ வாசக மனதில் தக்கவைக்கப் பட்டிருந்தது. அனுமன் போல அவரது பீடத்தை வாசகர்கள் எப்படியோ தங்கள் மனதில் உயர்த்திப் பிடித்தே வைத்திருந்தார்கள். ஜெயகாந்தன் சொன்னவற்றையெல்லாம் பொருட்படுத்தினார்கள் சனங்கள் என்பது அல்ல. அவ்வப்போது, “கஞ்சா பழகுங்கள்“, என்பது போல அவரது அறிக்கைகளை சிரித்தபடி சனங்கள் வேடிக்கை பார்த்தார்கள், அவர்மேல் கொண்ட அதே மரியாதை விலகாமல், என்பது ஆச்சர்யம். அவருக்கு ஒரு ‘செல

உலக இலக்கியம் - மொழிபெயர்ப்பு

Image
கேளா ஒலிகள் கேட்கிறவள் பீட்டர் ஸ்டாம் (சுவிட்சர்லாந்து)  * ஜெர்மானிய மொழியில் இருந்து ஆங்கிலத்தில் (Expectations)  மைக்கேல் ஹோஃப்மன் தமிழ் வடிவம் எஸ். சங்கரநாராயணன் * நீ ங்கள் நம்ப முடியாமல் இருக்கலாம். ஆனால் எத்தனையோ சப்த களேபரங்களின் நடுவே ஒரு தனி ஒலிக்குறிப்பை என்னால் பிரித்தறிய முடியும். பேரோசை என்றில்லை சின்ன சிணுக்கம். அதைக்கூட நான் அறிந்துகொண்டு விடுவேன். ஒலிகளுக்காக என் காதுகள் ஆர்வப்பட்டுக் காத்திருக்கின்றன. சவாலாய்க் கூடச் சொல்வேன். மத்தவர்கள் கேட்காத ஒலிகளைக் கூட நான் துல்லியமாக அறிவேன். இந்த அடுக்கக மேல்தளத்து தரைப் பலகைகளின் அதிர்வொலிகளை இங்கே சாப்பிட வருகிறவர்கள் கேட்டிருப்பார்களா சந்தேகமே. எதுவும் நடக்காத மாதிரி அவர்கள் பேச்சு சுவாரஸ்யத்தில் இருப்பார்கள். அரட்டையும் சிரிப்புமாய் அவர்கள் நான் கொடுக்கும் ஒயினை அருந்தி நான் சமைக்கும் உணவு வகைகளைச் சாப்பிடுகிறார்கள். நன்றி என்றோ, சூப்பரா இருக்கு என்று ஒரு பாராட்டோ இதுவரை அவர்கள் என்னிடம் சொன்னது கிடையாது. இங்கே வந்து என் உணவைச் சாப்பிடுவதே அவர்கள் எனக்குச் செய்கிற உபகாரம் என நினைப்பு அவர்களுக்கு.