Posts

Showing posts from October, 2020
Image
  2006 ம் ஆண்டின் சிறந்த நாவல் - தமிழக அரசு பரிசு நீர்வலை எஸ்.சங்கரநாராயணன் 6 ப ள்ளிக்கூடச்சீருடை கூடக் கழற்றாமல் ஓடிவந்து அப்பாமேல் உட்கார்ந்திருந்தாள். ரெட்டைப் பின்னலை மீறி சிறு மயிர்கள் வெளிச் சிதறியிருந்தன. பின் வெளிச்சத்தில் கம்பிகளாய்த் தெரிகின்றன. உற்சாகப் பந்தாய் இருந்தாள். வந்து விழுந்தால் அடங்காமல் திரும்பத் திரும்ப கொந்தளிக்கும் பந்து. வாழ்க்கையை ஆனந்தக் கிறுகிறுப்புடன் உணரும் பருவம் குழந்தைப் பருவம். உலகில் எல்லாமே ஆச்சர்யம் அவற்றுக்கு. எல்லாமே சந்தோஷம். நேத்துப் பாத்தேனே அப்பா. அந்த மரத்துல பூவே இல்லப்பா. இன்னிக்கு மாத்திரம் எங்கேர்ந்து வந்தது. அந்தா இருக்கு பாருட்டி குட்டி... அந்தப் பறவை... அது கொண்டு வந்து குடுத்தது எல்லாப் பூவையும்! இளவயதில் துயரங்கள் துன்பங்கள் இன்றி வாழ்க்கை அமைவது, வாழ்க்கை இன்பமயமானது என்கிற நம்பிக்கையை ஊட்ட வல்லதாய் இருக்கிறது. சிவாஜி பார்த்த காட்சிகள் வேறானவை... பிறந்தபோதே உயிர்ப் பிண்டமாய் வெளியே வந்த தக்கணமே அவன் தன் அம்மாவின் சாவுக்காக அழ நேர்ந்தது! அழுகை கூட அல்ல. அது கூக்குரல். ஒப்பாரி! விஷம் கொடிது. சாவு கொடிது என்பர் தம்
Image
  தமிழக அரசு பரிசு பெற்ற - 2006ம் ஆண்டின் சிறந்த நாவல்   நீர்வலை எஸ்.சங்கரநாராயணன் 5 பெ ண்களை அறியாதவன் அவன். அவன் அறிந்திருக்கக் கூடிய ஒரு பெண் - அம்மா... அவன் பிறந்தபோதே இறந்து போனாள். ஆண்களைத்தான் தெரியும். அவர்கள் - ஒன்று வீரர்கள்.... அப்பா. அல்லது, முரடர்கள்.... அவனை வேலை வாங்கிய சிலர். இல்லாவிட்டால் ரௌடிகள்... அவனுடன் சுற்றும் சிலர். வீட்டில் தங்காமல், வீட்டுக்கு அடங்காமல் அவர்கள் சுற்றித் திரிந்தார்கள். அன்பு அவர்களை வளைக்க முடியாதிருந்தது. வார்ப்பு-இரும்புகள். மேலே தண்ணியூற்றினால் நொறுங்கிப் போகும். வளையாது. ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையுமா என்று பழமொழி. வளையும்! அஞ்சு டிகிரி பனியில் வளைக்க முடியாத இரூம்பு ஐம்பது டிகிரி உஷ்ணத்தில், அதாவது மேல்வெப்பநிலையில், வ ளை யு ம்! முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும் என்று சொல்வார்கள். விளையும். என்னது? கன்னத்தில் முடி. முற்பகல் ஷேவ் செய்தால் பிற்பகலிலேயே கன்ன மழுமழுப்பு இராது! ஏல நீ ராஜாவும் இல்லை. பிச்சையும் இல்லை... என்கிறான் கிருட்டினமணி. நீ வீரன். தைரியசாலி. உனக்கு நான் பேர் வைக்கிறேன்... என்கிறான். அவன் திரும்பி
Image
  2006 தமிழக அரசின் பரிசு பெற்ற ஆண்டின் சிறந்த நாவல்   நீர்வலை எஸ்.சங்கரநாராயணன் 4 ஏ லாம்பாக்கத்தில் லோடு இறக்கி விட்டு அவர்கள் நடந்தார்கள். புதிய ஊரின் வனப்புகள். அருகில் அண்ணன். என்னவோ தோணியது. அண்ணன் கையைப் பற்றிக் கொண்டே சின்னக் குழந்தையாட்டம் நடந்தான். அதைப் பார்க்க கிருட்டினமணிக்குச் சிரிப்பு. 'எலேய் பசிக்கா?' இல்ல, எனத் தலையாட்டியவன், பிறகு வெட்கத்துடன் 'ஆமாண்ணே' என்றான் தயக்கமாய். அவனிடம் யார், பசிக்கிறதா என்று கேட்டிருக்கிறார்கள். ஆனால் அண்ணன் வெறும் டீ வாங்கிக் கொடுத்தான்! மணி எட்டு எட்டரை. வழியில் எங்கயும் சாப்பாடு விருத்தியாய் இராது என தள்ளிக் கொண்டே வந்துவிட்டான் கிருட்டினமணி. தவிரவும் குளிக்காமல் கொள்ளாமல் சாப்பிட பொதுவாக அவன் விரும்புவதில்லை. லாரிஷெட்டில் கூட எப்பவும் வேலை முடித்த ஜோரில் தண்ணியடிக்கிற குழாயில் குளித்து விடுவான். உடைமாற்றிக் கொண்டு சுத்தபத்தமாய்ச் சாப்பிட உட்கார்வான். 'ரெண்டு தெரு திரும்பினா பத்தினிக்கண்ணீர்னு ஒரு ஆறுடா. போயிக் குளிச்சிட்டு வந்து சாப்பிடலாம்... என்ன?' சரி என்று சொல்ல வேண்டியதாயிற்று. உண்மையில்
Image
  2006 தமிழக அரசின் பரிசு பெற்ற ஆண்டின் சிறந்த நாவல் நீர்வலை எஸ்.சங்கரநாராயணன் 3 ரா ணுவக்கார அப்பா. என்றாலும் அவர் சாவு துக்ககரமானது. வெயிலிலும் மழையிலும் பனியிலும் காடு மலைகளிலும் அலைந்து திரிகிறவராய் இருந்தார் பிச்சையின் அப்பா. குழந்தை இல்லாமல் வெகுகாலங் கழித்து அவன் அவருக்குப் பிறந்தான். பார்க்கிறவர்கள் பேரனா, என்பார்கள். அந்தளவு அவர் உடலும் மனசும் தளர்ந்திருந்தது. தலை வழுக்கை. நரை. நெற்றி நிறையச் சுருக்கங்கள், மணல் வெளிகளில் காற்று நடந்து போனாப்போல. நியதிகள் ஒடுங்கிவிட்டன. பிச்சையைப் பெற்ற ஜோரில் அம்மா இறந்துபோனாள். ஒரு குழந்தை பிறந்து விட்டால் எத்தனை அழகாகி விடும் வாழ்க்கை என நம்பியிருந்தார் அப்பா. அது அவரது அதிர்ஷ்டம். அவனது அதிர்ஷ்டம்... காலம் அவர்களைத் துரத்தி விசிறியடிப்பதில் எத்தனை ஆர்வப் பட்டது. யானையின் துதிக்கையாய் விதி ஆவேசமாய் முன்னகர்ந்து வருகிறாப் போல இருந்தது. இருந்த மண்வீடு ஒரு மழைக்குச் சரிந்து விழுந்தது தனிக்கதை... சோகக்கதைகள். பதுங்கு குழிக்குள் விழுந்தது குண்டு. அவர் மீது விழுந்திருக்க வேண்டும். சுதாரித்ததில் தொடையைக் கீறியிருந்தது. ஒரு மீட்டர்