இல் அறம் Short story – நன்றி குங்குமம் வார இதழ் எஸ். சங்கரநாராயணன் வீ ட்டில் அவன் கூட அவளும் இருந்தாள். மனைவி. என்றாலும் அவன் ஏனோ தன்னைத் தனியனாகவே உணர நேர்ந்தது. அவளை அவனுக்குப் பிடிக்கவில்லை. அவனுக்குப் பிடிக்கவில்லை என்பதை அவளும் உணர்ந்தாள். இதற்கு என்ன செய்ய தெரியவில்லை. அவள், அவளால் என்ன செய்ய முடியும்? அவள் அருகில் வந்தாலே அவனிடம் ஓர் விறைப்பு வந்தாப் போலிருந்தது. கனிவு அல்ல இறுக்கம் அது. ஒரு பெண்ணை இத்தனை கிட்டத்தில் ஒருவனால் வெறுக்க முடியுமா, ஒதுக்க அலட்சியப்படுத்த முடியுமா என்று தெரியவில்லை. முதலில் ஆச்சர்யமும் பிறகு அதிர்ச்சியும் அவளுக்கு ஏற்பட்டன. அழுகை வரவில்லை. அவளுக்கு அழவே வராது. துக்கிரி என்றும் பீடை என்றும் பெற்றவர்களே கரித்துக் கொட்டினார்கள் அவளை. கல்யாணம் அவளுக்கு ஒரு கதவைத் திறக்கும் என நினைத்தாள். இன்னுமான இருட்டு சூழ்ந்திருந்தது அவள் வாழ்க்கையில் இப்போது. வெளியே அந்த இளம் மாலைக்கு சீக்கிரமே இருட்டி விட்டது. மேகம் பொருமிக் கொண்டிருந்தது. நாடகம் துவங்குமுன் அரங்கில் ஒளி குறைக்கப்பட்டாப் போல இருள் சூழ்ந்து கவிந்தது. மழை நாடகம் துவங்கப் போகிறது என்று பட்
Posts
Showing posts from December, 2017
- Get link
- Other Apps
தனித்து விடப்பட்ட ரயில்பெட்டி (நன்றி பேசும்புதிய சக்தி, டிச. 2017) எஸ். சங்கரநாராயணன் சி றிய ரயில் நிலையம். நிலையத்துக்கு இடதும் வலதுமாக பூனை மீசை போல தண்டவாளங்கள் போகின்றன. ஊருக்கு வெளியே இருந்தது நிலையம். தண்ணி கஷ்டமான ஊர். சனங்கள் ஊரில் இருந்து இடுப்பில் ஒரு குடமும், குஸ்திக்காரன் போல் கையை உள்ளே விட்டபடி எடுத்து வரும் குடங்களுமாக வருவார்கள். தினசரி ரெண்டு லோக்கல் பாசஞ்சர் ரயில்கள் வரும் அங்கே. மத்தபடி மகா அமைதி. மதுரை போகிற ரயில்கள் அங்கே நிற்காது. கடன் கொடுத்தவனைப் பார்த்தாப் போல ஒரே ஓட்டமாய் ஓடும். பரந்த செவ்வக வெளி அது. மல்லாக்கக் கிடத்ப்பட்ட ஏணியாய் தண்டவாளம். ரோடு போடும் கருங்கல் குவித்துக் கிடத்தப் பட்டிருக்கும். பரந்த விஸ்தீரணத்தில் சிமென்ட் எடுத்த நடைமேடை. பள்ளத்தில் ரயில் பாதை. பெரிய பெரிய வேப்ப மரங்கள் புளிய மரங்கள் மகா நிழலளிக்கும் இடம். தாவரங்களை விட நிழல்கள் வேகமாக வளரவும் சுருங்கவும் செய்கின்றன. ஆடுகள் மாடுகள் புல் மேய்ந்துவிட்டு அங்கே வந்து கால்பரப்பி அமரும். இடையன் அவன்பாட்டுக்கு ஸ்டேஷனில் துண்டு விரித்துப் படுத்துக் கிடப்பான். மேற் கூரை தேவைப்படாத ஸ்டேஷ