Posts

Showing posts from 2022
Image
 Amudhasurabi - Deepavali malar 2022 யாவரும் கேளிர் எஸ்.சங்கரநாராயணன்   எ ங்கள் எல்லாருக்குமே ஜெகதீச மாமாவை ரொம்பப் பிடிக்கும். மாமா சென்னையில் மத்திய அரசு வேலை பார்க்கிறார். இன்னும் ஐந்தாறு வருடத்தில் பதவி ஓய்வு பெற்று விடுவார். எப்பவுமே உற்சாகமான கலகலப்பான மனிதர். நாங்கள் யாருமே எதிர்பாராத அளவில் திடீர் திடீரென்று அதிகாலையிலோ முற்றிய இரவிலோ இங்கே மதுரை வந்து எங்கள் வாசல் கதவைத் தட்டுவார். இப்படி நேரங் கெட்ட நேரத்தில் விசிட் அடிப்பது என்றால் அவர்தான், என்று எங்களுக்குத் தெரியும். ஒருதரம் அம்மா தன் தங்கை ரேவதியுடன் அலைபேசியில் பேசிக் கொண்டிருந்தாள். ரேவதி திருநெல்வேலியில் இருக்கிறாள். பாதிப் பேச்சில் ரேவதி “யாரோ வாசல் கதவைத் தட்டறாப்ல இருக்குடி. இரு வரேன்…” என்று போய்க் கதவைத் திறந்தால்… ஜெகதீச மாமா திருநெல்வேலி போயிருந்தார். கதவைத் திறந்த ஜோரில் புன்னகையுடன் நிற்கிற மாமா. “என்ன பாஸ்கர் எப்பிடி இருக்கே?” என்றபடி செருப்பைக் கழற்றுவார். “என்ன மாமா திடீர்னு?” என்று அவரிடம் கேட்க முடியாது. “ஏன்டா நான் சொல்லிட்டு தான் வரணுமா?” என்று அதே புன்னகையுடன் கேட்பார். “திடீர்னு வந்தா அதுதான் மாம
Image
  ஆவநாழி – அக். நவ. 2022 இதழில் வெளியான சி’றுகதை Art - Jeeva ஆறுமுகத் தாத்தாவின் ஏழாவது முகம் எஸ்.சங்கரநாராயணன் தா த்தா இறந்து போனார். நேற்று இரவு ஒருமணி ஒண்ணரை மணி அளவில், எல்லா விளக்கும் அணைத்துப் படுத்திருந்த நிலையில் “ஏவ்?..” என்ற பெருத்த விக்கல் தாத்தாவிடம் இருந்து வந்தது. தொண்டையில் இருந்து ஓர் ஒலித் துள்ளல். சட்டென்று இவள், என் மனைவி கனகவல்லி விழித்துக் கொண்டு விளக்கைப் போட்டால் தாத்தா படுக்கையில் புழுவாய் நெளிகிறார். உள்ளறையில் கட்டிலில்    உறங்கிக் கொண்டிருந்த பாட்டியை எழுப்பித் தகவல் சொன்னோம். பெடஸ்டல் மின்விசிறி ஒன்று பத்திரிகை ஒன்றை விரித்து என்னவோ வாசித்துக் கொண்டிருந்தது. “என்னது?” எனப் பதறி எச்சில் வழிய எழுந்து கொண்டாள் பாட்டி. சட்டென எழுந்துகொள்ள அவளுக்குத் திகைத்தது. அத்தனை வெளிச்சத்திலும் அவளுக்குக் கண்ணில் இருட்டு கட்டியது. அவளுக்கும் வயதாகி விட்டது அல்லவா? அந்த வயதில் நல்ல தூக்கத்தைக் கலைத்து எழுப்பி விடுவது என்பது பெரும் அவஸ்தை. கைத்தாங்கலாக தாத்தா அருகில் அமர்த்தினோம். “என்ன செய்யுது உங்களுக்கு…” என்று முன்குனிந்து பாட்டி அவரது கையைப் பிடித்துக் கொண்டாள்
Image
  நிசப்த ரீங்காரம் • சிந்தனைத் தொடர் • பகுதி 11 பரமஹம்ச ரகசியம் ஞானவள்ளல் • எ ண்பதுகளில் திரு வலம்புரி ஜானின் ‘தாய்’ வார இதழின் ஒரு சிறப்பிதழுக்காக எழுத்தாளர் ஆர். சூடாமணியிடம் ஒரு சிறு பேட்டி எடுத்தது நினைவு வருகிறது. மிக அருமையான மனிதர் அவர். அப்போதுதான் நான் இலக்கிய இதழ்களில் கதைகள் எழுத ஆரம்பித்தேன். பெரும் சுற்றிதழ்களில் அமோக வலம் வந்து, பிறகு புகழ்மோகம் விடுபட்டு நான் இலக்கிய இதழ்கள் பக்கம் என்னை அடையாளப் படுத்திக்கொள்கிற கவனத்துக்கு வந்திருந்தேன். தபால் தந்தித் துறையில் பணி அமருமுன்னால், என் கல்லூரிப் படிப்பு முடித்த ஜோரில், நான் கேரளம், கொல்லத்தில் ஒரு தனியார் நிறுவனத்தில் வேலையமர்ந்தேன். என் மாமா பார்த்து அமர்த்திய வேலை அது. நன்றி மாமா. வேலை நேரம் தவிர கிடைத்த தனிமையில் நான் ஆங்கில நாவல்கள் வாசிப்பதை மேற்கொண்டபோது, அருமையான உலக இலக்கிய நூல்களைப் பரிச்சயப் பட்டேன். என் சித்தி மருமகள், அண்ணி திருமதி காயத்ரி ஹரிஹரன் மூலம் ஆங்கிலத்தில் வாசிக்க ஆரம்பித்திருந்தேன். நன்றி அண்ணி. எழுத்தின் தாத்பரியம் என்ன, என கண் திறந்த வேளை எனக்கு அது. வணிக இதழ்க் கதைகளுக்கும், இலக்கிய மு
Image
  நன்றி பேசும் புதிய சக்தி • ஆகஸ்டு 2022 நிசப்த ரீங்காரம் / சிந்தனைத் தொடர் – பகுதி 10   அதிரடி சரவெடி ஞானவள்ளல்   இ ரட்டைப் புலவர் பாடல் ஒன்றை சில பகுதிகளுக்கு முன் எடுத்துக் காட்டினேன். என்னதான் காலடி பூமி சரிந்தாலும் சமாளிப்பதும் துவளாமல் கடந்து போகிறதும் நம்மாட்களின் இயல்புதான். இரட்டைப் புலவரில் ஒருவர் கண் பார்வை அற்றவர். அவரது ஆடை நீரில் அமிழ்ந்து காணாமல் போகிறது. அதை அடுத்த புலவர் சொல்கிறார். வேஷ்டி காணாமல் போகிற பெரிய இழப்பைச் சமாளித்துக் கொண்டு. என்னடா பொல்லாத வாழ்க்கை, என்கிற அலட்சிய பாவனை கொண்டாடியபடி, அந்த மனுசர் பாட்டில் பதில் சொல்கிறார். “இக்கலிங்கம் போனால் என், ஏகலிங்க மாமதுரைச் சொக்கலிங்கம் உண்டே துணை.” (கலிங்கம் – ஆடை.) உதை வாங்கிய வடிவேலு “வலிக்கலயே?” என நடிப்பது போல இருக்கிறது கதை. வெட்டி சவடால் விடுவதில் இப்படி நிறையப் பேர் இருக்கிறார்கள். இந்த பாணியில் கிராமத்துத் திண்ணை உரையாடல்கள் ரொம்பப் பிரசித்தம். “ஏண்டா அமெரிக்கா போனியே. அதிபரைப் பார்த்துப் பேசினியா?” “இல்லை.” “ஏன்?” “அவரு போனவாட்டி இந்தியா வந்தப்ப, என்னை வந்து பாத்தாரா என்ன? அதன