ஜன, - மார்ச் 2022 சங்கு இதழில் என் சிறுகதை டிங்கு எஸ்.சங்கரநாராயணன் கு ழந்தையின் பெயர் சரவணமூர்த்தி. தாத்தாவின் பெயர் அது. பெயர்சூட்டும் வைபவத்தில் அதன் காதில் ஓதிய பெயர் அதுதான். என்றாலும் குழந்தைகளுக்குச் செல்ல அடிப்படையில் ஒரு பெயர் அமைந்துதான் விடுகிறது. குழந்தையின் பெயர் டிங்கு. எப்படி யார் வைத்தார்கள் அந்தப் பெயர் அதுவே யாருக்கும் நினைவில்லை. என்றாலும் அந்தப் பெயர் நிலைத்துவிட்டது. வயிற்றை எக்கி எக்கித் தவழ ஆரம்பித்ததில் இருந்தே அவனிடம் ஓர் அசாத்திய வேகம் இருந்தாற் போலிருந்தது. உலகைக் கட்டியாள்கிற வேகம். பெற்றவளுக்கு மூச்சு திணறியது அவனைச் சமாளிக்க. தவழ்ந்து போய்ச் சுவரைப் பிடித்துக்கொண்டு எழுந்து நின்ற குழந்தை தானே நடக்க முயன்று பொத்துப் பொத்தென்று விழுந்தது. என்றாலும் திரும்ப எழுந்துநின்று ஒரு குடிகாரத் தள்ளாட்டத்துடன் சிரித்தது அம்மாவைப் பார்த்து. ஒரு ராணுவ உடற்பயிற்சி பொல காலைத் தூக்கித் தூக்கி வைத்து சற்று தடுமாறி, ஆனால் அம்மாவை எட்டிவிட்டது குழந்தை. அதற்கு ஒரே சிரிப்பு. நடக்கத் தெரிந்தபின் அதை வீட்டில் கட்டுப்படுத்த முடியவில்லை. அதைக் கட்டிப்போட வேண்டி ...
Posts
Showing posts from December, 2021
- Get link
- X
- Other Apps

நிசப்த ரீங்காரம் • பகுதி 2 வருத்தப்பட்டு உயிர் சுமக்கிறவர்கள் இ ளமை இருக்கும் வரை இருந்த இறுக்கமான கட்டுக்கள். பிடிமானங்கள் முதுமையில் சற்று தளர்ந்து தான் போகின்றன. உடல் தளர்வுக்கும் மனத் தளர்வுக்கும் தொடர்பு இல்லாமல் இல்லை, என்றுதான் தோன்றுகிறது. வாழ்க்கை அத்தனை உற்சாகமானது இல்லை போலத்தான் தெரிகிறது, இப்போது. இதை ஒரு காலத்தில் உற்சாகமாக நான் உணர்ந்து கடந்திருப்பதே இப்போது யோசிக்க வியப்பாக இருக்கிறது. அதிகம் வெற்றிகளைக் கணக்கில் எடுத்துக் கொண்ட மனது. எப்போது அது தோல்வி சார்ந்து கவனப்பட அல்லது கவலைப்பட ஆரம்பித்தது தெரியவில்லை. உடல் சுணக்கம் காட்டும்போது யோசனைகள் உட் சுருண்டு கொள்கிறது போலும். குளிர் தாளாமல் தன்னையே சுருட்டிக் கொண்டு ஒடுங்கிக் கொள்ளும் நாட்டு நாய் போல. இடுக்கண் வருங்கால் நகுக, என்கிறார் வள்ளுவர். அது வயசான காலத்தில் அவர் தனக்குத் தானே சொல்லிக் கொண்டதாய் இருக்கலாம். இடுக்கண் மாத்திரமே வந்தால் என்ன செய்வது? நான் மறு கன்னத்தைக் காட்டினேன். இரண்டிலும் அறை வாங்கியவன், இப்போது நான் என்ன செய்ய வேண்டும்? பஸ் நிறுத்தத்தை அடையுமுன் வந்து நின்ற பேருந...