நிசப்த ரீங்காரம் / பகுதி 5 வியத்தலும் இகழ்தலும் ஞானவள்ளல் த மிழின் முதல் நாவல்களில் ஒன்றான ‘பிரதாப முதலியார் சரித்திரம்’ அதன் இயல்பான நகைச்சுவைத் தன்மையால் தனி அடையாளம் பெற்றது. நாவல் ஆரம்பமே களை கட்டுகிறாப் போல ஒரு நுணுக்கமான கேள்வியும் அதற்கு விவேகமான பதிலுமாய் அமைந்திருக்கும். கேள்வி இதுதான். வாழ்க்கையில் புத்திசாலியும் நிறையத் தடவை தவறுகள் செய்கிறான். முட்டாளும் செய்கிறான். என்றாலும் அவனை ஏன் எல்லாரும் முட்டாள் என்கிறார்கள். இவனை ஏன் புத்திசாலி என்கிறார்கள்? அதற்கு நாவல் ஆசிரியர் மாயூரம் வேதநாயகம் பிள்ளை சொல்கிற விளக்கம் இது. ஒரு முட்டாள் தவறு செய்தால் அதைத் தவறு என அவன் உணர மாட்டான். ஆனால் அது அவனைத் தவிர பிற எல்லாருக்கும் தெரிந்துவிடும். அதேசமயம் புத்திசாலி தவறுசெய்தால் உடனே அதை உணர்ந்து விடுவான். அது தவறு என்று அவனுக்குத் தெரியும். மற்றவருக்குத் தெரியாது. நகைச்சுவை உணர்வில் தமிழன் சளைத்தவனே அல்ல. வள்ளுவர் உட்பட. கள்ளுண்ணாமை அதிகாரத்தில் வள்ளுவர் ஓர் உவமை சொல்கிறார். தண்ணீரில் தொலைந்து போனவனைத் தீப்பந்தம் கொண்டுபோய்த் தேடாதே! வள்ளுவரின் நகைச்சுவை பற்ற...
Posts
Showing posts from February, 2022
- Get link
- X
- Other Apps
தமிழ்ப் பல்லவி – ஜன. மார்சு 2022 இதழ் வாழை எஸ்.சங்கரநாராயணன் அ ம்மாவுக்கு உடம்பு சரியில்லை என்று தகவல் வந்தபோதே ராதாவுக்குப் பதட்டமாகி விட்டது. “எதுக்கெடுத்தாலும் பதறாதே ராது. உடம்புன்னா அதுக்கு நோவுன்னு வராதா என்ன?” என்றான் மணிவண்ணன். “எங்கம்மா ஒருநாள் கூட தலை வலி உடம்பு வலின்னு ஓய்ஞ்சி படுத்ததே கிடையாதுங்க” என்றாள் ராதா. “அந்தக் காலத்து மனுஷா எல்லாருமே அப்படிதான். தனக்கு ஒரு சிரமம்னா காட்டிக்க மாட்டாங்க…” என புன்னகைத்தவன், அவள் முகத்தைப் பார்த்துவிட்டு “நீ வேணா உங்கம்மாவைப் போயிப் பார்த்திட்டு வரதானா வாயேன். உங்கம்மாவுக்கும் ஒரு சமாதானமா யிருக்கும்” என்றான். “குழந்தைக்கு ஸ்கூல்…” என இழுத்தாள். “பெரிய ஐ ஏ எஸ் பரிட்சை பாழாப் போற மாதிரி யோசிக்கறே? யூகேஜி தானே? பரவால்ல. லீவு போட்டுக்கலாம்…” அவன் எப்படிப் பேசவேண்டும் என்று அவள் எதிர்பார்த்தாளோ அதேபோல அவன் பேசினான். அவனுடைய நெருக்கடி நேரங்களில் அவளும் அப்படித்தான் பேசுவாள். அப்படித்தான் பேசிக் கொள்வார்கள். எப்பேர்ப்பட்ட அம்மா. காலையில் குளித்துவிட்டு வருகையில் திடீரென்று தலைசுற்றி, சமாளித்து அப்படியே சிறிது நின்று நெ...
- Get link
- X
- Other Apps
சிந்தனைத் தொடர் / நிசப்த ரீங்காரம் • 4 நன்றி பேசும் புதிய சக்தி – பிப்ரவரி 2022 சுஜாதாவின் ‘பூனை’ ஞானவள்ளல் டீ ன் ஏஜைக் கடக்குமுன் எல்லாருக்கும் அந்த வயதுப்பகுதியை ஒரு ‘ஹை ஜம்ப்’ தாண்டிக் குதித்துவிட வேகம் வருகிறது ஏனோ. நாம பெரியாம்பளைடா, அல்லது நாம இப்போது வளர்ந்த பெண், என்கிற ஒரு மயக்கம். இருப்பின், சூழலின் போதாமை பூதாகரமாக நம்மால் உணரப்படும் வயது அது. நினைவு பிடிக்குள் வருகிற எனது அந்த வாலிப வயதில் முதல் யோசனை, நாம வேற எங்கியோ பிறந்திருக்க வேண்டிய ஆளப்பா, இங்க இந்த அப்பாம்மா கிட்ட வந்து மாட்டி யிருக்கிறோம், என்கிற விசனமே. அநேகமாக எல்லா வாலிப ஆளுக்கும் இப்படியோர் சலிப்பு வந்துதான் இருக்கும். நம்மைப் பற்றி அதிகமாகவும், மத்தாள் நம்ம தரத்துக்கு ஒரு படி தாழ்வாகவும் நினைப்பு. பெரியவர் என்ன சொன்னாலும் ஒரு கன்னுக்குட்டியாய் முட்டித் தள்ளும் வேகம். கயித்தை அவுத்து விடுங்கப்பா, என ஆத்திரக் கூக்குரல். அவுத்து விட்டால்? எங்க போய் முட்டிக்குவோம் தெரியாது. ஆனால் கட்டுக்கள் எரிச்சல் படுத்தின. அந்த வயசில் புதுசாய்க் கதை எழுத வேறு வேகம் எனக்கு வந்தது. எப்படி கதை எழுத ...